Showing posts with label உனது விழியில். Show all posts
Showing posts with label உனது விழியில். Show all posts

Wednesday, June 18, 2025

668.எனக்கு எனக்கு(உனது விழியில்)** RECORDED

 

எனக்கு எனக்கு என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது ..
எனக்கு எனக்கு என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது
எனது எனது என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது 
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது
(MUSIC)

தனக்கென்று ஆசையை வென்று பிறர்க்கென்று  சே..வை செய்து 
மனம்-கண்ட இன்..பம்-எல்லாம் சொல் சொல்லக் கூடுமோ 
தனக்கென்ற ஆசையை வென்று பிறர்க்கென்று  சே..வை செய்து 
மனம்-கண்ட இன்..பம்-எல்லாம் சொல் சொல்லக் கூடுமோ 
செய்வது யாரு என்பதைச் சொன்னால் சேவையும் ஆகிடுமோ 
எனச் சொல்லித் தந்த பெருமா எனச் சொன்ன சாயி பெருமா!
எனது எனது என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது 
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது நெஞ்சம் தானாய் மாறுது
(MUSIC)

எதற்கென்று சேவையைச் செய்யும் மனம்-எண்ண வேண்டும் கொஞ்சம்
எனச்-சொன்ன சாயி போதம் நமக்கான வேதமாம்
எதற்கென்று சேவையைச் செய்யும் மனம்-எண்ண வேண்டும் கொஞ்சம்
எனச்-சொன்ன சாயி போதம் நமக்கான வேதமாம்
நல்மனம் நின்ற சாயி-உன்-அன்பே பாதையைக் காட்டியது
அதில் ஏது மனிதக் கணக்கு அதில் ஏது மனிதப் பிணக்கு
எனக்கு எனக்கு என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது 
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது..நெஞ்சம் தானாய் மாறுது
_______________________________________________________________

The mind gets polluted with selfish desires which slowly transforms in doing the service you taught.
The bliss that is derived in doing selfless service can not be expressed in words.
Hey Sai, you told us to do the service anonymously and unanimously. When one trumpets the act of service, it ceases to be a service; Thus spake SAI.
The mind that is doing the service should pause for a moment to contemplate the purpose of service.This is the gospel given by Sathya Sai.
It is the boundless Prema of You,Hey SAI, that shows the path, in such a case the accounting of how much and who did are meaningless. This is un-SAI-service like, as you said.


சாயி கீதம்-7
முதல்பக்கம்


Monday, March 6, 2023

610.உனக்கும் எனக்கும்(உனது விழியில்) **


 
உனக்கும் எனக்கும் இருக்கும் உறவு காலம் கடந்தது (2)
நீ கண்ணன் உருவில் சொன்ன கீதை உரையே ஆடுது
உனக்கும் எனக்கும் இருக்கும் உறவு காலம் கடந்தது 
நீ கண்ணன் உருவில் சொன்ன கீதை உரையே ஆடுது
music

உயிர் என்று ஜீவன் படைத்து உடல் என்று அதனில் இணைத்து மனம் தந்து விந்தை செய்தாய் புதிரான சாயி ராம்
(2)
உன்-செயல் ஒன்று  புரிவது என்று என மனம் விழிக்கிறது 
அதில் தோன்றும் ஞான விழிப்பு  (2)
உனக்கும் எனக்கும் இருக்கும் உறவு காலம் கடந்தது
நீ கண்ணன் உருவில் சொன்ன கீதை உரையே ஆடுது என் நெஞ்சில் ஆடுது
(MUSIC)
விழியென்னும் ஊற்றினில் அன்பும் கரமென்னும் ஆ
ற்றில் பாசம்
தரும் கோடி தாயின் ரூபம் நீதானே சாயி ராம்
(2)
உன் முகம் காணும் நேரத்தில் என்கண்  தாய்முகம் காண்கிறது
அதில் தோன்றும் தெய்வப் பரிவு
அதில் தோன்றும் தெய்வப் புரிவு
உனக்கும் எனக்கும் இருக்கும் உறவு காலம் கடந்தது
நீ கண்ணன் உருவில் சொன்ன கீதை உரையே ஆடுது என் நெஞ்சில் ஆடுது


 Other SONGS Recorded


Thursday, December 22, 2022

604.திதிக்கும் சாயி நாமம்(உனது விழியில்) ***

 

திதிக்கும் சாயி நாமம் தேவ அமுதைப் போன்றது (2)

நம் மனது அதனை உரைக்க உரைக்க லேசாய் ஆகுது

திதிக்கும் சாயி நாமம் தேவ அமுதைப் போன்றது 

நம் மனது அதனை உரைக்க உரைக்க லேசாய் ஆகுது 

(Music)

உயிர் சென்று சேர்ந்திடவென்று  எம லோகம் என்று உண்டு 

அதில் பாப பலன்கள் எல்லாம் நமை வாட்டத் தோன்றுமாம்

உயிர் சென்று சேர்ந்திடவென்று  .. எம லோகம் என்று உண்டு 

அதில் பாப பலன்கள் எல்லாம் நமை வாட்டத் தோன்றுமாம்

அவை அணுகாது நமை அணுகாது காரணம் கூறிடவோ 

அதை சாயி நாமம் விடுமோ.. நமை வருத்த நாமம் விடுமோ

திதிக்கும் சாயி நாமம் தேவ அமுதைப் போன்றது 

நம் மனது அதனை உரைக்க உரைக்க லேசாய் ஆகுது பூ போலே ஆகுது

(Music)

தனக்கென்று வாழ்ந்தது போதும் பிறர்க்கென்று வாழு கொஞ்சம்

எனச் சொல்லும் சாயி நாமம் உரைக்காத பாடமா

தனக்கென்று வாழ்ந்தது போதும் பிறர்க்கென்று வாழு கொஞ்சம்

எனச் சொல்லும் சாயி நாமம் உரைக்காத பாடமா 

நெஞ்சினில் எந்தன் நாமத்தைக் கொள்வோர் வாழ்க்கையின் பொறுப்பெனது

இது சத்ய சாயி வாக்கு இது  சாயி சத்ய வாக்கு 

திதிக்கும் சாயி நாமம் தேவ அமுதைப் போன்றது 

நம் மனது அதனை உரைக்க உரைக்க லேசாய் ஆகுது பூ போலே ஆகுது


சாயி கீதம்-7

முதல்பக்கம்


Tuesday, December 20, 2022

603.எனது மனதில் உனது நினைவு(உனது விழியில்) ***

 

எனது மனதில் உனது நினைவு தேனைப் போன்றது (2)
என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது 
-எனது மனதில் சாயி நினைவு தேனைப் போன்றது
-என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது 
(Music)

உனதன்புக் கண்களிரண்டில் பொறு என்று ஜாடை தந்து 
எதிர் வந்து காட்சி தந்தாய் அது மீண்டும் தோன்றுமோ
உனதன்புக் கண்களிரண்டில் பொறு என்று ஜாடை தந்து 
எதிர் வந்து காட்சி தந்தாய் அது மீண்டும் தோன்றுமோ
-கண்ணிமையாது உன் முகம் கண்டால் காலமும் நின்றிடுமோ 
-அக்காலம் மீண்டும் வருமோ..அந்த காலம் மீண்டும் வருமோ
-எனது மனதில் சாயி நினைவு தேனைப் போன்றது
என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது
(Music)

பூப் போலுன் வார்த்தைகள் கொஞ்சும் அதை மீண்டும் கேட்க நெஞ்சம் 
கணம் தோறும் ஏங்கும் வையம் திரும்பாயோ சாயிராம் 
பூப் போலுன் வார்த்தைகள் கொஞ்சும் .. அதை மீண்டும் கேட்க நெஞ்சம் 
கணம் தோறும் ஏங்கும் வையம் திரும்பாயோ சாயிராம்
-என்உயிர் என்றும் உன்முகம் தந்த அன்பினில் வாழ்கிறது
-எது என்றும் வாழ உதவு நீ நேரில் வந்து உலவு 
எனது மனதில் உனது நினைவு தேனைப் போன்றது
என் இதயம் முழுதும் இனிக்கும் சாயி கவிதை ஆகுது ..ஆ   கவிதை ஆகுது

சாயி கீதம்-7

முதல்பக்கம்