Showing posts with label வெள்ளிக்கிழமை விடியும் வேளை. Show all posts
Showing posts with label வெள்ளிக்கிழமை விடியும் வேளை. Show all posts

Sunday, May 10, 2020

247. அன்புமனதில் (வெள்ளிக்கிழமை விடியும் வேளை) **




அன்புமனதில் தினமும்சேவை பாரினில் நான் புரிவேன் 
பாரினில் நான் புரிவேன்
சொல்லிக்கொடுத்த சாயிபேரை அனுதினம் நான் ஜபிப்பேன் 
 ஆ…ஆ…ஆ… அனுதினம் நான் ஜபிப்பேன்
அன்புமனதில் தினமும்சேவை பாரினில் நான் புரிவேன் 
சொல்லிக்கொடுத்த சாயிஉன்பேரை அனுதினம் நான்ஜபிப்பேன்
 (MUSIC)
நெஞ்சில் துஞ்சிடும் பவபயம்நீங்கி ஆன்மமும் விழித்திடுமே  
துயிலும் ஆன்மமும் விழித்திடுமே
சேவைசெய்திடும் நெஞ்சினில்ஓமிசை வருகையை முழங்கிடுமே 
சாயி வருகையை முழங்கிடுமே 
அன்புமனதில் தினமும்சேவை பாரினில் நான் புரிவேன் 
சொல்லிக்கொடுத்த சாயிஉன்பேரை அனுதினம் நான்ஜபிப்பேன்
(MUSIC)
சேவையைப்புரிந்திட மூடியமனத்திரை அருளினில் விலகிடுமே 
சாயி அருளினில் விலகிடுமே 
அதுவரைமூடிய நெஞ்சினில்உயரிய ஞானமும்-பிறந்திடுமே
ஆத்ம ஞானமும்-பிறந்திடுமே
 அன்புமனதில் தினமும்சேவை பாரினில் நான் புரிவேன் 
பாரினில் நான் புரிவேன்
சொல்லிக்கொடுத்த சாயிஉன்பேரை அனுதினம் நான்ஜபிப்பேன்
ஆ…ஆ…ஆ அனுதினம் நான் ஜபிப்பேன்