Showing posts with label நதி எங்கே போகிறது. Show all posts
Showing posts with label நதி எங்கே போகிறது. Show all posts

Friday, May 5, 2017

405. இறை எங்கே தோன்றியது(நதி எங்கே போகிறது)



இறை-எங்கே தோன்றியது அது-நம் நாடே
நாடென்றே  தோன்றியது இறைவன்-தானே
இறை-என்றே சொல்வதெதை அன்பைத் -தானே
அன்பென்றால் என்ன-அது சாய்ராம்-தானே
(2)
இறை-எங்கே தோன்றியது அது-நம் நாடே
(MUSIC)
அவதாரம் நூறு-வரும் இறைவன்-ஒன்று
தேகங்கள் கொண்டு-வரும் மனிதன்-என்று
(2)
லோகத்தில் மறுபடியும் ப்ரேமை தந்து  (2)
காத்திடுவான்  சாயிபிரான் விரைவில் வந்து
 இறை-எங்கே தோன்றியது அது-நம் நாடே
(MUSIC)
வெள்ளி எழும் வேளையிலே நகர சங்கீதம்
பர்த்தியிலே தந்திடுவான் தரிசனம் நாளும்
(2)
வேறெங்கும் இருக்கிறதா சொர்க்கம் என்று (2)
கொண்டே நாம் மகிழுவது சாயியின் அன்பு
இறை-எங்கே தோன்றியது அது-நம் நாடே
நாடென்றே  தோன்றியது இறைவன்-தானே
இறை-என்றே சொல்வதெதை அன்பைத்-தானே
அன்பென்றால் என்ன-அது சாய்ராம்-தானே
இறை-எங்கே தோன்றியது அது-நம் நாடே
சாய்ராம் ஸ்ரீசாய்ராம்-ராம்..சாய்ராம்..சாய்ராம்