Monday, August 3, 2026

672. ஆநிரைக் கண்ணன் நீ(தாமரைக் கன்னங்கள்)




[Intro]
[flute melody, acoustic guitar strumming, synth pads]
(Aah... aah... aah...)
[electronic drum beat enters]

[Verse 1]
[male vocals]
ஆநிரைக் கண்ணன் நீ
கோசலை ரா-மன் நீ
ஆநிரைக் கண்ணன் நீ
கோசலை ரா-மன் நீ
ஈச்வரீ பாலன் நீ
அன்பையே சிந்தும் போது சாயிராம் ரூபம் நீ

[Verse 2]
[female vocals]
ஆயிரம் உந்தன் பேர்
ஆயினும் சொல்வேன் கேள்
ஆயிரம் உந்தன் பேர்
ஆயினும் சொல்வேன் கேள்
உன்னை நான் சிந்தித்தே
சாயி ராம் என்னும் போது
காதிலே சிந்தும் தேன்
காதிலே சிந்தும் தேன்
காதிலே சிந்தும் தேன்

[Instrumental Break]
[acoustic guitar solo, syncopated percussion, flute trills]

[Verse 3]
[male vocals]
சித்த மெழுந்திடும் மாய-மடக்கிடும் உன் பதமோ
[female vocals]
ஓ..பர்த்தி நகர் வரும் போதிலடங்குதல் எவ்விதமோ
[male vocals]
சித்த மெழுந்திடும் மாய-மடக்கிடும் உன் பதமோ
[female vocals]
ஓ..பர்த்தி நகர் வரும் போதிலடங்குதல் எவ்விதமோ
[male vocals]
பயம் வந்த வேளையிலே
உனை எண்ணும் போதினிலே
துணை வந்து காக்கும்போது
தோன்றுமோ பாதங்கள்

[Chorus]
[male and female duet]
ஆயிரம் உந்தன் பேர்
ஆயினும் சொல்வேன் கேள்
உன்னை நான் சிந்தித்தே
சாயி ராம் என்னும் போது
காதிலே சிந்தும் தேன்
காதிலே சிந்தும் தேன்

[Outro]
[flute melody fades, acoustic guitar strumming continues to end]


Wednesday, January 7, 2026

671.தந்தையாய் தாயுமாய்(மௌனமே பார்வையால்)


தந்தையாய் தாயுமாய் எனைப் பார்த்துக் கொள்ளும் சாயி
வாழ்விலே வாய்மையாய் என் கூட வந்த சாயி
தந்தையாய் தாயுமாய் எனைப் பார்த்துக் கொள்ளும் சாயி
வாழ்விலே ஜோடியாய் என் கூட வந்த சாயி
1+(sm)+1
(MUSIC)

என்னிசைப் பண்ணை நான் செய்த உடனே நீ தந்த நீறை விட எது வேண்டும் எது வேண்டும்
( SM)
என்னிசைப் பண்ணை நான் செய்த உடனே நீ தந்த நீறை விட எது வேண்டும்
எந்தன் குரலில் உன்னைப் பாடும் அருள் மேல் வேறெந்த பேறு நான் பெற வேண்டும்
வேறெந்த பேறு ஏன் பெற வேண்டும்
ம்..
தந்தையாய் தாயுமாய் எனைப் பார்த்துக் கொள்ளும் சாயி
வாழ்விலே ஜோடியாய் என் கூட வந்த சாயி
(MUSIC)

உந்தன் நினைவே எந்தன் நெஞ்சில் இருக்கே வேறெந்த நினைவு அதில் ஏன்வேண்டும் எழ வேண்டும்
(SM)
உந்தன் நினைவே எந்தன் நெஞ்சில் இருக்கே வேறெந்த நினைவு அதில் எழ வேண்டும்
என்று இருக்கும் எந்தன் சின்ன மனதில் உ
ன்னைப் போற்றி பாடல் மட்டும் எழ வேண்டும் 
ன்னைப் போற்றி பாடல் என்றும் எழ வேண்டும் 
ம்..
தந்தையாய் தாயுமாய் எனைப் பார்த்துக் கொள்ளும் சாயி
வாழ்விலே ஜோடியாய் என் கூட வந்த சாயி

 

சாயி கீதம்-7
முதல்பக்கம்

Monday, December 1, 2025

670.நெஞ்சமிருக்கு பூப்போலே(சக்கரக் கட்டி ராஜாத்தி)


நெஞ்சமிருக்கு பூப்போலே 
அவன் அன்புக்கில்லையே தாழ்ப்பாளே
கொஞ்சும் குரலில் சாயீசன் தரும்
அன்பைப் பருகுவோம் சிந்தாமே

1+இசை+1
கட்டிப் போடும் அவன் ப்ரேமை
இந்த பார் முழுதுமதற்கு அடிமை
(2)
பார்வை அதனில்
அன்பைக் குழைத்து
பார்வை அதனில் அன்பைக் குழைத்து சாயிதருவதே இனிமை

கொட்டும் நீறை விரல் அளிக்கும்
அதை வாங்கிக் கொள்ள மனம் துடிக்கும்
(2)
தேனைப் பழிக்கும்
சாயி அழைக்கும்
தேனைப் பழிக்கும் சாயி அழைக்கும்
வார்த்தை மயக்கம் கொடுக்கும்
பார்த்த பின்னரும் கேட்ட பின்னரும் (2)
கேள்வி என்ன
தேடல் என்ன
கேள்வி என்ன தேடல் என்ன
தேவையில்லை ஐயம்
நெஞ்சமிருக்கே பூப்போலே
அவன் அன்புக்கில்லையே தாழ்ப்பாளே
ஐயமிருக்கும் நெஞ்சத்திலே அது புகுந்து மாற்றிவிடும் தன்னாலே
(இசை)
பிறகு என்றிடல் முறையோ நம் மனதில் இன்னமும் திரையோ
(2)
மாயை கொடுக்கும்
தீரா மயக்கம்
மாயை கொடுக்கும் தீரா மயக்கம்
போக்கிக் கொள்வோம் வா வா

கருணை காட்டி நம்மை அழைப்பார்
நம்மைத் தன் பிள்ளை எனச் சொல்லி அணைப்பார்
(2)
நேரில் அழைத்து
நீரை அளித்து
நேரில் அழைத்து நீரை அளித்து கண்கள் பனித்திட அருள்வார்

பார்த்த பின்னரும் கேட்ட பின்னரும் (2)
கேள்வி என்ன
தேடல் என்ன
கேள்வி என்ன தேடல் என்ன
தேவையில்லை ஐயம்

நெஞ்சமிருக்கே பூப்போலே
அவன் அன்புக்கில்லையே தாழ்ப்பாளே
கொஞ்சும் குரலில் சாயீசன் தரும்
அன்பைப் பருகுவோம் சிந்தாமே


Friday, November 14, 2025

669.முன்பே வா(அன்பே வா)

 

முன்பே வா..முன்பே வா..முன்பே வா முன்பே வா வா
(Music)
நெஞ்சம் எரித்திடும் வேதனயால் சாம்பல் ஆகும் முன்பே வா
(2)
கண்கள் பெருக்கிடும்  நீரதனால்  கடல்கள் தோன்றும் முன்பே வா
(2)
முன்பே வா முன்பே வா வா வா
(2)
(Music)
நீ நினைத்தால் என் வேதனை தீர்ந்து விடும்
அருள் கொடுத்தால் என் அழுகையும் நின்றுவிடும்
நான் உனையே கேட்கவில்லை
ஏன் அழைத்தாய் புரியவில்லை
பதில் இன்னும் கிடைக்கவில்லை
சோதனையைத் தாங்கிடவே என் மனம் முதிரவில்லை 
நெஞ்சை எரித்திடும் வேதனையில் சாம்பல் ஆகும் முன்பே வா
கண்ணில் பொங்கிடும் நீரினிலே கடல்கள் தோன்றும் முன்பே வா
முன்பே வா முன்பே வா வா வா
(Music)
நான் சிறுவன் என நினைத்தே எனக்கருள்வாய்
கண்பார்த்தே என் சிறுமையைப் பொறுத்திடுவாய்
ஆசையினை மூட்டி விட்டே
தூங்குமெனை எழுப்பி விட்டே
நீ விளையாடுவதேன்
விழுந்த மனம் நிமிர்ந்து எழ யாரிடம் நான் அழுவேன்
முன்பே வா வா .. முன்பே வா முன்பே வா வா


சாயி கீதம்-7
முதல்பக்கம்

Wednesday, June 18, 2025

668.எனக்கு எனக்கு(உனது விழியில்)** RECORDED

 

எனக்கு எனக்கு என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது ..
எனக்கு எனக்கு என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது
எனது எனது என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது 
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது
(MUSIC)

தனக்கென்று ஆசையை வென்று பிறர்க்கென்று  சே..வை செய்து 
மனம்-கண்ட இன்..பம்-எல்லாம் சொல் சொல்லக் கூடுமோ 
தனக்கென்ற ஆசையை வென்று பிறர்க்கென்று  சே..வை செய்து 
மனம்-கண்ட இன்..பம்-எல்லாம் சொல் சொல்லக் கூடுமோ 
செய்வது யாரு என்பதைச் சொன்னால் சேவையும் ஆகிடுமோ 
எனச் சொல்லித் தந்த பெருமா எனச் சொன்ன சாயி பெருமா!
எனது எனது என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது 
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது நெஞ்சம் தானாய் மாறுது
(MUSIC)

எதற்கென்று சேவையைச் செய்யும் மனம்-எண்ண வேண்டும் கொஞ்சம்
எனச்-சொன்ன சாயி போதம் நமக்கான வேதமாம்
எதற்கென்று சேவையைச் செய்யும் மனம்-எண்ண வேண்டும் கொஞ்சம்
எனச்-சொன்ன சாயி போதம் நமக்கான வேதமாம்
நல்மனம் நின்ற சாயி-உன்-அன்பே பாதையைக் காட்டியது
அதில் ஏது மனிதக் கணக்கு அதில் ஏது மனிதப் பிணக்கு
எனக்கு எனக்கு என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது 
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது..நெஞ்சம் தானாய் மாறுது
_______________________________________________________________

The mind gets polluted with selfish desires which slowly transforms in doing the service you taught.
The bliss that is derived in doing selfless service can not be expressed in words.
Hey Sai, you told us to do the service anonymously and unanimously. When one trumpets the act of service, it ceases to be a service; Thus spake SAI.
The mind that is doing the service should pause for a moment to contemplate the purpose of service.This is the gospel given by Sathya Sai.
It is the boundless Prema of You,Hey SAI, that shows the path, in such a case the accounting of how much and who did are meaningless. This is un-SAI-service like, as you said.


சாயி கீதம்-7
முதல்பக்கம்


Tuesday, January 14, 2025

667.விழிகள் பரிவாக நோக்கும்(கவிதை அரங்கேறும் நேரம் )** RECORDED

 
விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
உடன் மனதின் ஆர்ப்பாட்டம் ஓயும் அதில் இதயம் பெரும் மாற்றம் காணும்
 சாயி உனைக்காணும் நேரம்
(MUSIC)
 விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
உடன் மனதின் ஆர்ப்பாட்டம் ஓயும் அதில் இதயம் பெரும் மாற்றம் காணும்
 விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
(SM)
சாயி உன் பாசம் தேடி வரும் மாந்தர் எந்நாளும் கோடி
ஸ்வாமி உன் பாசம் தேடி வரும் மாந்தர் எந்நாளும் கோடி
நீ தருவாய் எல்லார்க்கும் ஆசி ஒரு தாய் போல் சொந்தம் கொண்டாடி
நீ  அன்பு புரண்டோடும் ஆறு  உனைக் காணும் கண்ணாகும்  ஆறு 
 விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
(MUSIC)
கைகள் கொண்டே நீ சுரந்து தரும் நீறே நோய் போக்கும் மருந்து
அதைக் கொண்டோர் வேறேதும் எதற்கு எனச் சொல்வார் உன் பாதம் பணிந்து 
மனம் எங்கும் தாளாத உவகை சொல் எங்கே சொல்  கூறும்  அதனை
  விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
(MUSIC)
பேரில் அன்பாடும் சாயி நீ உலகோர் எல்லார்க்கும் ஸ்வாமி 
விழியாலே அன்பூட்டும் தாயே உனைப் போலே வேறொன்றும் நீயே
என் பிறவி  தொடர்கின்றதானால்  உன் நினைவை மறவாமை வேண்டும்
விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
உடன் மனதின் ஆர்ப்பாட்டம் ஓயும் அதில் இதயம் பெரும் மாற்றம் காணும்

விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
 



Thursday, October 10, 2024

666.குழல் இனிது என்போரே(நிலவு ஒரு பெண்ணாகி) **

 

குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ 
(MUSIC)

குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ சாயி குரல் போலோ 
இசை பிறக்கும் ஓம் போலே சாயி குரல் தானோ (2)
பங்காரு என்பாரே அது கிடைக்கும் பேறோ
குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ சாயி குரல் போலோ  
(MUSIC)

உள்ளம் தனில் சேயாக இறைவன் வரத் தாயாக (2)
அன்பமுதம் தரலாக` என்ன தவம் செய்தோமோ 
புன்னகை மேல் எதற்கோ சொல் அதை விளக்க ஏதோ சொல் (2)
அதைவிடவே மானிடர்க்கு பிறப்பெடுத்த பயன் என் கொல் ..!
குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ 
(MUSIC)

கவருகிற அவர் குரலே  ஒரு கணத்தில் மயக்கிடுமே
கேட்கையிலே அமிழ்தினைப் போல் இனிக்கும் அது இறை-வரமே 
வாழ்க்கையினில் பேறாக பக்தருக்கு கிடைத்ததுவே (2)
ஆண்டவனின் வடிவான சாயிபிரான் திருக்குரலே  
குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ 
(MUSIC)

ஈன்று புறம் தருதலுடன் தாய் கடமை நின்றிடுமோ 
என்றுரைத்து  நம்முடனே இருக்க புலம் வந்ததுவே 
அலைமேலே துயில்பவனே மலைமேலே உறைசிவனே (2) 
நமக்கெனவே வடிவெடுத்து நம்முடனே இருந்ததுவே 
குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ சாயி குரல் போலோ



சாயி கீதம்-7

முதல்பக்கம்