Showing posts with label நிலவு ஒரு பெண்ணாகி. Show all posts
Showing posts with label நிலவு ஒரு பெண்ணாகி. Show all posts

Thursday, October 10, 2024

666.குழல் இனிது என்போரே(நிலவு ஒரு பெண்ணாகி) **

 

குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ 
(MUSIC)

குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ சாயி குரல் போலோ 
இசை பிறக்கும் ஓம் போலே சாயி குரல் தானோ (2)
பங்காரு என்பாரே அது கிடைக்கும் பேறோ
குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ சாயி குரல் போலோ  
(MUSIC)

உள்ளம் தனில் சேயாக இறைவன் வரத் தாயாக (2)
அன்பமுதம் தரலாக` என்ன தவம் செய்தோமோ 
புன்னகை மேல் எதற்கோ சொல் அதை விளக்க ஏதோ சொல் (2)
அதைவிடவே மானிடர்க்கு பிறப்பெடுத்த பயன் என் கொல் ..!
குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ 
(MUSIC)

கவருகிற அவர் குரலே  ஒரு கணத்தில் மயக்கிடுமே
கேட்கையிலே அமிழ்தினைப் போல் இனிக்கும் அது இறை-வரமே 
வாழ்க்கையினில் பேறாக பக்தருக்கு கிடைத்ததுவே (2)
ஆண்டவனின் வடிவான சாயிபிரான் திருக்குரலே  
குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ 
(MUSIC)

ஈன்று புறம் தருதலுடன் தாய் கடமை நின்றிடுமோ 
என்றுரைத்து  நம்முடனே இருக்க புலம் வந்ததுவே 
அலைமேலே துயில்பவனே மலைமேலே உறைசிவனே (2) 
நமக்கெனவே வடிவெடுத்து நம்முடனே இருந்ததுவே 
குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ சாயி குரல் போலோ



சாயி கீதம்-7

முதல்பக்கம்



Thursday, October 3, 2024

665.உலவுகிற விண் மீனோ (நிலவு ஒரு பெண்ணாகி) **

உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட முடிவு செய்த நிலவோ  
(MUSIC)
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த  நிலவோ 
வாயுதிரும் பூப்போலே இருக்கும்-உந்தன் சிரிப்போ (2)
தேனெனவும் அமுதெனவும் இனிப்பதுந்தன் மொழியோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ
(MUSIC)
உள்ளம் தனில் சேயாக பாசம் தரும் தாயாக (2)
கதறுகிற பக்தர் மனம் தேற்ற புலம் வந்தவனோ  
பொன் பொருள்கள் எதற்கோ சொல் நில புலமும் எதற்கோ சொல் (2)
நானிருக்க அவை ஏனோ என்றுரைத்த இறையோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ
(MUSIC)
கவருகிற குரல் குழலோ அதில் ப்ரேமை வழிந்திடுமோ  
பார்க்கையில் நீ மனிதர்கள் போல் தோன்றுவதும் உன் முடிவோ 
வாழ்க்கையினில் பேறாக மானவர்க்கு அமைந்தவனோ (2)
யாக்கையினில் தோன்றாத இறை வடிவாய் மறைந்தவனோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ
(MUSIC)
தேனொழுகும் சொல்லுடனும் உதவிடும் நல் கரத்துடனும் 
இவ்வுலகில் வாழ்ந்திருக்க சாயி உனை வேண்டுகிறேன் 
இறை நாமம் உதட்டினிலே மனித சேவை கரத்தினிலே (2)
படைத்தவனே எனக்கிருக்க உன்னருளை வேண்டுகிறேன் 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ


சாயி கீதம்-7

முதல்பக்கம்