Showing posts with label கேளம்மா சின்ன பொண்ணு கேளு. Show all posts
Showing posts with label கேளம்மா சின்ன பொண்ணு கேளு. Show all posts

Thursday, May 4, 2017

504. தாளம்மா சாயிபிரான் (கேளம்மா சின்ன பொண்ணு கேளு)


தாளம்மா சாயிபிரான் தாளு நீ ஓயும்போது சாஞ்சுக்க-அது தோளு
(2)
நாளை-வா என்றழைத்திடும் காடு
பிழைக்க வழி-கொடுக்கும் சாயி-தாளை நாடு நாடு  
தாளம்மா சாயிபிரான் தாளு நீ ஓயும்போது சாஞ்சுக்க-அது தோளு
(MUSIC)
 ஊழ்-படுத்தும் பாடு அதை எதுத்து-நிற்பது வீணு  (2)
அது உருட்டும்போதும் மிரட்டும்போதும் செல்லாது-உன் பீடு 
இப்பவே-நீ முழிக்கணும் சாயி-தாளை பிடிக்கணும்  (2)
தினம் முடிஞ்சவரை அவன்பெயரை நெஞ்சில் எண்ணி உருகணும் 
தாளம்மா  தாளு..தாளம்மா சாயிபிரான் தாளு
நீ ஓயும்போது சாஞ்சுக்க-அது தோளு
(MUSIC)
எது-வரினும் அவன்-பெயரைச் சொல்லிப் பழகணும் 
நீ மெத்தனமா இருக்கும்-போக்கை விட்டே ஒழிக்கணும்
விடிய-விடிய அவன்-உருவை த்யானம்-பண்ணனும் (2)  
 உந்தன் மனதைஅவனை உணரும்பணியில் பழக்கியாகணும் 
நாளும் நாளும் நன்றாய் பழக்கணும்
தாளம்மா
தாளம்மா சாயிபிரான் தாளு நீ ஓயும்போது சாஞ்சுக்க-அது தோளு
 (MUSIC)
காலை-மாலை என்று-வேளை பார்ப்பதை விடணும்
 அவன் பேரை-நெஞ்சில் நினைப்பதுவே பிழைப்பெனவே-வரணும்
(2)
 தாளைப்பற்றி பேரைச்சொன்னால்என்னென்னவோகிடைக்கும் (2)
 இதை எண்ணித்தாளைப் பிடித்துக் கொண்டால் மெய்ப்பொருள்- தானாய் விளங்கும்
தாளம்மா  தாளு..தாளம்மா சாயிபிரான் தாளு
மனம் ஓயும்போது சாஞ்சுக்க-அது தோளு


503. தேனம்மா சாயி-சொல்லு (கேளம்மா சின்ன பொண்ணு கேளு)



தேனம்மா  சாயி-சொல்லு தேனு
அதைக் கேட்க-சொர்க்கம் தோணும்-நேரில் பாரு
(2)
வாய்மையே சாயி-கொண்ட பேரு 
ஊழை போக்க-வந்த சாமியவன் பாரு-பாரு
தேனம்மா  சாயி-சொல்லு தேனு
அதைக் கேட்க-சொர்க்கம் தோணும்-நேரில் பாரு + (MUSIC)
பர்த்தி-எனும் ஊரு அதில் எழுந்தருளிய..தாரு (2)
அந்த சிவபெருமான் சாயிரூபம் கொண்டு வந்திருக்..காரு
இதனை-நாமும் உணரணும் அவன்-புகழைப் பாடணும் (2)
அதைத் தடுப்பவரே மறுப்பவரே உண்மையை-நீங்க உணரணும்
தேனம்மா  தேனு..
தேனம்மா  சாயி-சொல்லு தேனு
அதைக் கேட்க-சொர்க்கம் தோணும்-நேரில் பாரு
(MUSIC)
கனிந்த-மனம் கொண்டு-சேவை செய்யப் பழகணும்
பிறரின் மனது-நோக நடக்கும்-குணத்தை விட்டு உதறணும்  
உருகி-உருகி உருகி-சாயி கீதம்-பாடணும் (2)
அதைப் பாடும்-குரல் இல்லையென்றால் காதால் கேட்கணும்
நாமும் போதும் காதால் கேட்கணும்
தேனம்மா  தேனம்மா  சாயி-சொல்லு தேனு
அதைக் கேட்க-சொர்க்கம் தோணும்-நேரில் பாரு 
(MUSIC)
காலையிலே எழுந்தவுடன் சாயி-சுப்ர..பாதம் 
பின் தினம்-புரியும் வேலையிலும் அவன்-நினைப்பே யோகம்
(2)
சாயி கீதம் என்ற ஒன்றால் என்னென்னவோ நடக்கும் (2)
இதை எண்ணிப்பார்க்க மறந்துவிட்டால் நிம்மதி-எங்கே கிடைக்கும்  
தேனம்மா  தேனு..தேனம்மா  சாயி-சொல்லு தேனு
அதைக் கேட்க-சொர்க்கம் தோணும்-நேரில் பாரு