Showing posts with label கவிதை அரங்கேறும் நேரம். Show all posts
Showing posts with label கவிதை அரங்கேறும் நேரம். Show all posts

Tuesday, January 14, 2025

667.விழிகள் பரிவாக நோக்கும்(கவிதை அரங்கேறும் நேரம் )** RECORDED

 
விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
உடன் மனதின் ஆர்ப்பாட்டம் ஓயும் அதில் இதயம் பெரும் மாற்றம் காணும்
 சாயி உனைக்காணும் நேரம்
(MUSIC)
 விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
உடன் மனதின் ஆர்ப்பாட்டம் ஓயும் அதில் இதயம் பெரும் மாற்றம் காணும்
 விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
(SM)
சாயி உன் பாசம் தேடி வரும் மாந்தர் எந்நாளும் கோடி
ஸ்வாமி உன் பாசம் தேடி வரும் மாந்தர் எந்நாளும் கோடி
நீ தருவாய் எல்லார்க்கும் ஆசி ஒரு தாய் போல் சொந்தம் கொண்டாடி
நீ  அன்பு புரண்டோடும் ஆறு  உனைக் காணும் கண்ணாகும்  ஆறு 
 விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
(MUSIC)
கைகள் கொண்டே நீ சுரந்து தரும் நீறே நோய் போக்கும் மருந்து
அதைக் கொண்டோர் வேறேதும் எதற்கு எனச் சொல்வார் உன் பாதம் பணிந்து 
மனம் எங்கும் தாளாத உவகை சொல் எங்கே சொல்  கூறும்  அதனை
  விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
(MUSIC)
பேரில் அன்பாடும் சாயி நீ உலகோர் எல்லார்க்கும் ஸ்வாமி 
விழியாலே அன்பூட்டும் தாயே உனைப் போலே வேறொன்றும் நீயே
என் பிறவி  தொடர்கின்றதானால்  உன் நினைவை மறவாமை வேண்டும்
விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
உடன் மனதின் ஆர்ப்பாட்டம் ஓயும் அதில் இதயம் பெரும் மாற்றம் காணும்

விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்