Showing posts with label ரோஜா மலரே ராஜ குமாரி. Show all posts
Showing posts with label ரோஜா மலரே ராஜ குமாரி. Show all posts

Wednesday, March 23, 2016

61. ரோஜா மலரே நாணிடும் (ரோஜா மலரே ராஜ குமாரி) ***




ரோஜாமலரே நாணிடும்-மென்மை பூஜைக்குரிய சாயிஉன் நெஞ்சம்
முழுதிலும்  அன்பன்றோ 
தொழுதிடும் விதமன்றோ
உன்திருப் பதமன்றோ
கேளாய்மனதே சாயியின்எதிரே யாரும் சமமன்றோ
பேதம்இலையன்றோ பாதம்நிலையன்றோ
ஏழைஎன்றாலும் பர்த்திபுரீசன் ராஜாமகனாய் ஏற்றிடுமிறைவன்
உண்மை-இதுவன்றோ அவனும்-இறையன்றோ
என்றும்-நிலையன்றோ
(Music)
வானத்தின்மீதே இருந்தாலும் தேவரைப்பெரிதாய்க் கொள்ளாது
கோட்டையின்-மேலே நின்றாலும் அரசனைச்சென்றே அடையாது
வாடிவதங்கும் ஏழையைத்தேடித் பாய்ந்திடும்சாயி அருளன்றோ (2)
கண்டிடத்தோன்றும் காட்சியிலே பாவங்கள்மாயும் வீழ்ச்சியிலே
பஞ்செனத்தோன்றும் அவன்இதயம் எரிக்கும்துயரை இதம்கொடுக்கும்
நன்றாய்வைக்கும் உலகத்தின்மாயப் பிடிப்பினைஅறுக்கும் தெரியாதோ (2)
ரோஜாமலரே நாணிடும்-மென்மை பூஜைக்குரிய சாயிஉன் நெஞ்சம்
முழுதிலும்  அன்பன்றோ 
தொழுதிடும் விதமன்றோ
உன்திருப் பதமன்றோ
(Music)
சாயீ..சன்பேர்-பாடுங்களேன் இச்சைபோக்கி நாடுங்களேன்
மண்ணில்-விண்ணை நாடுங்களேன் சொல்லில்இனிமை கூட்டுங்களேன்
ஓர்கதிஎன்றே திருவடி கொண்டே போற்றியேஅவனைப் பாடுங்களேன்(2)
ரோஜாமலரே நாணிடும்-மென்மை பூஜைக்குரிய சாயிஉன் நெஞ்சம்
முழுதிலும்  அன்பன்றோ 
தொழுதிடும் விதமன்றோ
உன்திருப் பதமன்றோ
 (BOTH)