Showing posts with label இதய வீணை தூங்கும்போது. Show all posts
Showing posts with label இதய வீணை தூங்கும்போது. Show all posts

Saturday, May 30, 2020

353. என்று ப்ரேம சாயிரூபம் (இதய வீணை தூங்கும்போது) **




என்று-ப்ரேம சாயிரூபம் வந்து உதிக்குமோ 
எனது-கண்கள் அதனைக்கண்டு மகிழ்ந்து துதிக்குமோ 
என்று-ப்ரேம சாயிரூபம் வந்து உதிக்குமோ…
(MUSIC)
உதடு சுழிக்குமழகைக் கண்கள் காணுமோ 
அன்பின் மனித ரூ..பம் பாரில்  தோன்றுமோ
(2)
விளக்கம் கொடுப்பதனால்  துயரம் போகுமோ  (2)
 காட்டுத் தீயை ஊதி ஊதி அணைக்க முடியுமோ
அணைக்க முடியுமோ
என்று-ப்ரேம சாயிரூபம் வந்து உதிக்குமோ 
எனது-கண்கள் அதனைக்கண்டு மகிழ்ந்து துதிக்குமோ 
என்று-ப்ரேம சாயிரூபம் வந்து உதிக்குமோ
 (MUSIC)
தினமும்-சாயி உனையே நான்-நினைத்துத்-தன்னாலே 
பொல பொலவெனக்கண்…ணீர்உகுத்து உருகுகின்றேனே
(2) 
உருகும் நெஞ்சம் உனக்குப் பிடிக்கும் என்பதனாலே (2) 
தினமும் அழுது அழுது என்னை உருக வைத்தாயோ     
உருக வைத்தாயோ    
என்று-ப்ரேம சாயிரூபம் வந்து உதிக்குமோ 
எனது-கண்கள் அதனைக்கண்டு மகிழ்ந்து துதிக்குமோ 
என்று-ப்ரேம சாயிரூபம் வந்து உதிக்குமோ
 (MUSIC)
உருகி அன்பை அளித்திடவே இனி யாரு 
உடைந்த நெஞ்சைத் தேற்றிடவே வேறாரு 
அழுத கண்ணைத் துடைத்திடவே இங்கு யாரு 
இனி உலகில் பெருகிடுமே கண்ணீர் ஆறு
என்று-ப்ரேம சாயிரூபம் வந்து உதிக்குமோ