Showing posts with label ஆடப்பிறந்தவளே ஆடிவா. Show all posts
Showing posts with label ஆடப்பிறந்தவளே ஆடிவா. Show all posts

Sunday, August 4, 2024

654.வா-வா சா..யீசன்(ஆடப்பிறந்தவளே ஆடிவா) **



 சாயிராம்-பேரை போற்றியே-பாட சமிதியில் கூடிடுவோம் 
பூஜையைப்-போலே நாம் எந்த-நாளும் சேவையை ஆற்றிடுவோம் 
ஓடி வா ..
ஓடி வா ..
ஓடி வா 
ஓடி வா .. ஓடி வா .. ஓடி வா 
வா-வா சா..யீசன் தாள் போற்ற வா
அவர் சொன்னாற்போல் நல்-சேவை ஆற்ற வா 
ஓடி வா .. ஓடி வா .. ஓடி வா 
வா-வா சா..யீசன் தாள் போற்ற வா
அவர் சொன்னாற்போல் நல்-சேவை ஆற்ற வா 
ஆற்ற வா  .. ஆற்ற வா  .. ஆற்ற வா 
(MUSIC)

தடை இல்லை வாய் விட்டு நீ  பாட வா 
நல்ல இசை கூட்டி பலரோடு  வா  பாட வா
தடை இல்லை வாய் மனம்-ஒன்றி நீ  பாட வா 
நல்ல இசை கூட்டி பலரோடு  வா  பாட வா 
பிணி கொண்டு இருப்போர்க்கு இதம் கூட்ட வா (2)
கொண்ட  அன்பாலே அவர் வாட்டம் தனைப் போக்க வா ...
போக்க வா..போக்க வா..போக்க வா..
வா-வா சா..யீசன் தாள் போற்ற வா
அவர் சொன்னாற்போல் நல்-சேவை ஆற்ற வா 
ஓடி வா .. ஓடி வா .. ஓடி வா 
(MUSIC)

மயிலாட்டம் கண்டாலே திறன்-தோன்றுமோ 
மாங்குயில்-பாடக் கேட்டாலே குரல்-தேறுமோ
(2)
செயல்பாடு இல்லாமல் பேச்சே-நன்றோ (2)
எனச் சொன்னாரே நம் சாயி அதைத் தேறுவாய்..
தேறுவாய்..தேறுவாய்..தேறுவாய்
(MUSIC)
கற்கப் பின் நிற்க-எனக் குறளல்லவோ
நாம் கற்பதற்கு சமிதியின்-மேல் வேறென்னவோ
(2)
நம் வாழ்க்கை தன்-செய்தி எனச் சொன்னவோர் (2)
அந்த சாயீசன் திருவாக்கை சிரமேற்க வா..
தேடி வா .. நாடி வா .. ஓடி வா 
வா-வா சா..யீசன் தாள் போற்ற வா
அவர் சொன்னாற்போல் நல்-சேவை ஆற்ற வா 
ஓடி வா .. ஓடி வா .. ஓடி வா 
வா-வா சா..யீசன் தாள் போற்ற வா
சத்ய சாயீ  சமிதியை நீ நாடி வா
தேடி வா .. நாடி வா .. ஓடி வா
ஓடி வா .. ஓடி வா .. ஓடி வா 
தேடி வா .. நாடி வா .. ஓடி வா
ஓடி வா .. ஓடி வா .. ஓடி வா



Saturday, May 6, 2017

116. சாயித் திருப்புகழைப் பாடிவா..(ஆடிவா ஆடிவா ஆடிவா)***



சாயிராம் புகழைப் பாடுவதாலே நாவுகள் ஓய்வதில்லை
அவன்புகழ்ப் பாட்டைக் கேட்பதனாலே 
காதுகள் சோர்வதில்லை
சாயிராம்..சாயிராம்..சாயிராம்..(2)
_____________________

சாயித் திருப்புகழைப் பாடிவா
புகல்தேடி-அவன்-பதத்தை நாடிவா
சாயிராம்..சாயிராம்..சாயிராம்
(2)
 (MUSIC)
தேன் போலும் அவன் நாமம் நீ கூறி வா 
அந்த அமுதாகும் அவன் கானம் நீ-கேட்கவா  
(2)
தடையென்ன இசைகேட்க விரைந்தோடி வா (2)
நன்னெஞ்சே-உன் மனம்-தேறும் புகழ்-பாடி வா.. .
சாயிராம்..சாயிராம்..சாயிராம்
சாயித் திருப்புகழைப் பாடிவா
புகல்தேடி அவன் பதத்தை நாடிவா 
சாயிராம்..சாயிராம்..சாயிராம்.
(MUSIC)
துயர்யாவும் விரைந்தோடும் நீ காணடா
உன் நெஞ்சத்தில் இனிமேலே  குறை ஏதடா  
(2)
உலகாளும் நம்சாயி இறைதானடா (2)
வான்புகழ்கின்ற அவன்எங்கும் நிறைவானடா
சாயிராம்..சாயிராம்..சாயிராம்
(MUSIC)
உயிர்-காக்க நீர்-தந்த தாயல்லவோ
 அவன் பால் போன்ற மனம் கொண்ட சேயல்லவோ
(2)
திருநாமம் பசிபோக்கும் விருந்தல்லவோ (2)
பந்தப் பிறப்பென்ற நோய்போக்கும் மருந்தல்லவோ
 சாயிராம்..சாயிராம்..சாயிராம்
சாயித் திருப்புகழைப் பாடிவா
புகல்தேடி அவன்-பதத்தை நாடிவா 
சாயிராம்..சாயிராம்..சாயிராம்..(2)
சாயித் திருப்புகழைப் பாடிவா
புகல்தேடி அவன்-பதத்தை நாடிவா 
சாயிராம்..சாயிராம்..சாயிராம்