Tuesday, December 20, 2022

603.எனது மனதில் உனது நினைவு(உனது விழியில்) ***

 

எனது மனதில் உனது நினைவு தேனைப் போன்றது (2)
என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது 
-எனது மனதில் சாயி நினைவு தேனைப் போன்றது
-என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது 
(Music)

உனதன்புக் கண்களிரண்டில் பொறு என்று ஜாடை தந்து 
எதிர் வந்து காட்சி தந்தாய் அது மீண்டும் தோன்றுமோ
உனதன்புக் கண்களிரண்டில் பொறு என்று ஜாடை தந்து 
எதிர் வந்து காட்சி தந்தாய் அது மீண்டும் தோன்றுமோ
-கண்ணிமையாது உன் முகம் கண்டால் காலமும் நின்றிடுமோ 
-அக்காலம் மீண்டும் வருமோ..அந்த காலம் மீண்டும் வருமோ
-எனது மனதில் சாயி நினைவு தேனைப் போன்றது
என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது
(Music)

பூப் போலுன் வார்த்தைகள் கொஞ்சும் அதை மீண்டும் கேட்க நெஞ்சம் 
கணம் தோறும் ஏங்கும் வையம் திரும்பாயோ சாயிராம் 
பூப் போலுன் வார்த்தைகள் கொஞ்சும் .. அதை மீண்டும் கேட்க நெஞ்சம் 
கணம் தோறும் ஏங்கும் வையம் திரும்பாயோ சாயிராம்
-என்உயிர் என்றும் உன்முகம் தந்த அன்பினில் வாழ்கிறது
-எது என்றும் வாழ உதவு நீ நேரில் வந்து உலவு 
எனது மனதில் உனது நினைவு தேனைப் போன்றது
என் இதயம் முழுதும் இனிக்கும் சாயி கவிதை ஆகுது ..ஆ   கவிதை ஆகுது

சாயி கீதம்-7

முதல்பக்கம்




No comments:

Post a Comment