Wednesday, August 9, 2023

640.தேனாய் இனித்திடும் சாயி நாமம்(பாடாத பாட்டெல்லாம்) **

தேனாய் இனித்திடும் சாயி நாமம் ஆறாகக் காதினில் வந்து பாயும் 
தீராத சோகமும் ஓடிப் போகும் தானாக நெஞ்சினில் சாந்தி கூடும்
(2)
சொல் சாயி ராமெனும் திவ்ய நாமம் 
(music)

நெஞ்சூறிச் சொன்னதும் ஆஹாஹா 
நெஞ்சாறிப் போகுதே  ம்ம்ம்ஹ்ம்ஹ்ம்
கண்ணூறும் அன்பினை ஜில் ஜில் ஜில்
கண்ணோரம் தந்ததார் சொல் சொல் சொல்
தேனாய் இனித்திடும் சாயி நாமம் ஆறாகக் காதினில் வந்து பாயும் 
தீராத சோகமும் ஓடிப் போகும் தானாக நெஞ்சினில் சாந்தி கூடும்
சொல் சாயி ராமெனும் திவ்ய நாமம் 
(music)

மொத்தமாய் சத்வமாய் வந்த சாயிராம்
மொத்தமாய் அன்பினைத் தந்த சாயிராம்
சத்தமாய் சத்தமாய் வந்த நோயெல்லாம் 
சுத்தமாய் சுத்தமாய் போக்கும் சாயிராம் 
தேனாய் இனித்திடும் சாயி நாமம் ஆறாகக் காதினில் வந்து பாயும் 
தீராத சோகமும் ஓடிப் போகும் 
தானாக நெஞ்சினில் சாந்தி கூடும் (2)
(music)

உலவியே உலவியே காட்சி தந்ததார்
எளிதிலே எளிதிலே மீட்சி தந்ததார்
எதிரிலே எதிரிலே வந்து நின்றதார்
நீறிலே பேறினைத் தந்து சென்றதார்
தேனாய் இனித்திடும் சாயி நாமம் ஆறாகக் காதினில் வந்து பாயும் 
தீராத சோகமும் ஓடிப் போகும் தானாக நெஞ்சினில் சாந்தி கூடும்
சொல் சாயி ராமெனும் திவ்ய நாமம் (2)
சாயிராம் சாயிராம் சாயிராமம் 
சாயிராம் சாயிராம் சாயிநாமம் (2)


 

No comments:

Post a Comment