Tuesday, September 17, 2024

661.அன்புக்குத் தான்(நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது) **

 அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது (2)
சாயி உன்னை வந்தடைந்து தஞ்சம் என்றது 
அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது
மனது-கொள்ளை போகும்-உந்தன் அன்பைக்-கேட்டது (2)
அது அன்பு காட்ட  உன்னைக்-கேட்டுக் கற்றுக்கொண்டது
அது அன்பு காட்ட  உன்னை பார்த்து கற்றுக்கொண்டது
மனது-கொள்ளை போகும்-உந்தன் அன்பைக்-கேட்டது
அது அன்பு காட்ட  உன்னைக்-கேட்டுக் கற்றுக்கொண்டது
கற்றுக்கொண்டது

(MUSIC)

அய்யே பின் அந்த சேவை உன்னைத் தேடி வந்தது 
வள்ளல் உந்தன் ப்ரேமை ஒன்றால் அழகு சேர்த்துக் கொண்டது 
(2)
அன்பாக உந்தன் பேரை நீயும் வைத்துக் கொண்டது (2)
பேறாக எண்ணி 
ந்த அன்பு கர்வம் கொண்டது 
அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது ஆசை-வந்தது
(MUSIC)

ஆ.
காக்கையின் சிறகிலன்று பா..ரதியார் கண்டது
கண்ணனவன் கருமையினை என்று-கவிதை சொல்லுது
இந்நாளில் அவர்-இருந்தால் உன்னைப் போற்றி சொல்வது 
என் அய்யே நீ  அன்பினது எல்லை-என்று தானது
 
அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது ஆசை-வந்தது
(MUSIC)

எப்போது வயிற்றுக்கு-நல் உணவு தன்னைக் கொள்வது
என்பதனைத் திருக்குறளும் எடுத்தழகாய்ச் சொல்லுது
பங்காரு என்ற உந்தன் அழைப்பு காதுக்குணவது
 அதை உண்டோர்கள்  வயிற்றுக்காக உண்பதென்பதரியது

அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது 
சாயி உன்னை சரணடைந்து தஞ்சம் என்றது
அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது 



No comments:

Post a Comment