Thursday, September 26, 2024

663.யார் என்னென்ன சொன்னாலும்(நீ என்னென்ன சொன்னாலும் ) **

 

யார் என்னென்ன சொன்னாலும் தொடரும்
என்னை சொல் கொண்டு சுட்டாலும் தொடரும்
(2) 
இனி யார் கேலி செய்தாலும் தொடரும்
உன்னை என்றென்றும் என் பாடல் பகரும் 
(2)
சாயீ ..சாயீ 
(MUSIC)

அன்பிற்குரியவன் என எனை நினைந்து (2)
என்னைக் கொஞ்சம் உந்தன் அருகினில் அழைத்து (2)
உந்தன் அருளென மலர்களைச் சொரிந்து (2)
சித்து புரிந்ததை அறிந்திலர் அவர்க்கு
புரிந்ததை உணர்த்து 
யார் என்னென்ன சொன்னாலும் தொடரும்
என்னை சொல் கொண்டு சுட்டாலும் தொடரும்
(MUSIC)

உந்தன் விழுமிய அருளினில் கரைந்து (2)
பொங்கும் மனதினில் பாடல்கள் புனைந்து (2)
கண்கள் குளமென விழிகளும் நிறைந்து (2)
என்னைக் கழுவினேன் நான் அதை முகந்து நான் எனை மறந்து
யார் என்னென்ன சொன்னாலும் தொடரும்
(MUSIC)

வெள்ளி சனியெனும் கிழமைகள் மறந்து 
பர்த்தித் திருமகன் அருளினில் நனைந்து
எந்தன் மனத்தினை உனக்கென அளித்து 
உன்னை முழுவதும் சரண் என அடைந்து 
இருப்பதை நினைந்து  
யார் என்னென்ன சொன்னாலும் தொடரும்
என்னை சொல் கொண்டு சுட்டாலும் தொடரும்
இனி யார் கேலி செய்தாலும் தொடரும்
உன்னை என்றென்றும் என் பாடல் தொடரும்
சாயீ ..சாயீ


சாயி கீதம்-7

முதல்பக்கம்


No comments:

Post a Comment