Friday, September 13, 2024

664.நீயே அன்பமுது(விழியே கதை எழுது) **

நீயே அன்பமுது உன் பேரே அது தானே ..!
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
(music)
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
நீயே அன்பமுது உன் பேரே அது தானே ..!
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
(music)

எந்தன் மனதின்-எண்ண அலைகள் அதில் முழுதும் உந்தன்-எழில் கலைகள் (2)
என் நெஞ்சில் உன் அன்பு தாகம் தந்தாளுமே உந்தன் தாக்கம்
உன் போலவே வேறாரய்யா
(music)

கண்கள் கணையானது நெஞ்சம் பிணையானது (2)
பஞ்சு மனமானது அது எந்தன் மனையானது
என் நெஞ்சில் வாட்டங்கள் ஏது உன் அன்புக் கண்-பார்க்கும் போது  
உன் போலவே வேறாரய்யா
நீயே அன்பமுது உன் பேரே அது தானே ..!
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
(music)

ப்ரேமை ஆறானது உலகில் ஆளானது (2)
பேரும் அதுவானது எங்கள் பேறும் அதுவானது 
உன் வார்த்தை தேனூற்றுத் தோயல் 
ஓர் தாயைப் போலன்பின் சாயல்
உன் போலவே வேறாரய்யா
நீயே அன்பமுது உன் பேரே அது தானே ..!
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
உன் போலவே வேறாரய்யா..



 

No comments:

Post a Comment