Monday, March 6, 2023

611.கொடுத்ததெல்லாம்(வளர்ந்த கலை மறந்து விட்டாள்) **


கொடுத்ததெல்லாம் ஒன்றிரண்டா கோடி-சாயிராம்
அது பெரியதொரு களஞ்சியத்தைப் போலசாயிராம்
கொடுத்ததெல்லாம் ஒன்றிரண்டா கோடி-சாயிராம்
நீ பெரிய அன்புக் களஞ்சியத்தைப் போலசாயிராம்
குடும்பத்துடன் அன்பைப் பெறத் தந்ததாலன்றோ
அதைப் பெற்ற நாங்கள் குடும்பமாக ஆகினோம் என்றோ
நீ குடும்பத்துடன் அன்பைப் பெறத் தந்ததாலன்றோ
அதைப் பெற்ற நாங்கள் குடும்பமாக ஆகினோம் என்றோ
கொடுத்ததெல்லாம் ஒன்றிரண்டா கோடி-சாயிராம்
நீ பெரிய அன்புக் களஞ்சியத்தைப் போலசாயிராம்
(MUSIC)
காதில்-உந்தன் பஜனை தேனை ஊற்றுமே அய்யா (2)
சத்தியமே அது-மனதை ஆற்றுமே மெய்யா
சாயி சத்தியமே வருடி-மனதை ஆற்றுமே மெய்யா
காசினுக்கா அன்பளித்தாய் சொல்லுவாய் அய்யா
தந்தக் காசினுக்கா அன்பளித்தாய் சொல்லுவாய் அய்யா
இந்த காசினிக்கே அன்புதந்தாய் செல்வமாய் அய்யா
நடந்ததையே எழுதுகிறேன் கண்டு நான் கண்ணால் 
நீ  எழுதும்-திறம் அருளுவதால் அன்பின்-மாமன்னா 
கொடுத்ததெல்லாம் ஒன்றிரண்டா கோடி-சாயிராம்
நீ பெரிய அன்புக் களஞ்சியத்தைப் போலசாயிராம்
(MUSIC)
தினம்-விதமாய் கட்சி தந்தே அருளுவாய் அய்யா (2)
எம் தேவையினை ஆசையினைக் கேட்டு-தான் அய்யா (2)
கொடுத்ததெல்லாம் பாட்டில்-சொல்ல முடியுமா-அய்யா (2)
அதை யார்-முயன்றும் துளியும்-கூட முடியுமா-அய்யா
கொடுத்ததெல்லாம் ஒன்றிரண்டா கோடி-சாயிராம்
நீ பெரிய அன்புக் களஞ்சியத்தைப் போலசாயிராம்
(MUSIC)
மேதினியில் உன்னைப் போல தெய்வம் ஏதய்யா (2)
நீ அன்பினுக்கே அன்பளித்தாய் அன்பினால் அய்யா
அந்த அன்பினுக்கே அன்பளித்தாய் அன்பினால் அய்யா
காவிரியாய் பெருக்கெடுத்தாய் அன்பிலே அய்யா
நீ காவிரியாய் பெருக்கெடுத்தாய் அன்பிலே அய்யா
அதன் கொள்ளிடமாய் ஆனவனும் நீயன்றோ அய்யா
நடந்ததையே எழுதுகிறேன் கண்டு நான் கண்ணால் 
நீ  எழுதும்-திறம் அருளுவதால் அன்பின்-மாமன்னா 
கொடுத்ததெல்லாம் ஒன்றிரண்டா கோடி-சாயிராம்
அது பெரியதொரு களஞ்சியத்தைப் போலசாயிராம்
குடும்பத்துடன் அன்பைப் பெறத் தந்ததாலன்றோ
அதைப் பெற்ற நாங்கள் குடும்பமாக ஆகினோம் என்றோ
நீ குடும்பத்துடன் அன்பைப் பெறத் தந்ததாலன்றோ
அதைப் பெற்ற நாங்கள் குடும்பமாக ஆகினோம் என்றோ
கொடுத்ததெல்லாம் ஒன்றிரண்டா கோடி-சாயிராம்
அது பெரியதொரு களஞ்சியத்தைப் போலசாயிராம்
நீ பெரியதொரு களஞ்சியத்தைப் போலசாயிராம் ..





No comments:

Post a Comment