Thursday, February 17, 2022

584.வாழும் உலகில்(பாலும் பழமும் கைகளில் ஏந்தி) ***

ம்..ம்ம் ..
(Interlude)
வாழும் உலகில் அனைவரும் ஒன்றே யாரும் ப்ரேமை உருவகம் என்றே
வேதம் உரைக்கும் உண்மை சொன்னாயே சாயி உந்தன் அன்பு தந்தாயே
வாழும் உலகில் அனைவரும் ஒன்றே யாரும் ப்ரேமை உருவகம் என்றே
வேதம் உரைக்கும் உண்மை சொன்னாயே சாயி உந்தன் அன்பு தந்தாயே
(music)
உண்ணும் உணவைப் பரிந்தளித்தாயே பருகும் நீரைச் சொரிந்தளித்தாயே (2)
அறிவின் கண்ணைத் திறந்து வைத்தாயே பணிவை நெஞ்சில் பதிய வைத்தாயே (2)
வாழும் உலகில் அனைவரும் ஒன்றே யாரும் ப்ரேமை உருவகம் என்றே
வேதம் உரைக்கும் உண்மை சொன்னாயே சாயி உந்தன் அன்பு தந்தாயே
(music)
தாயைப் போலே கரிசனத்தாலே தினமும் நீ தரும் தரிசனத்தாலே (2)
சேயைப் போலே அழும்-ஜனம் தானே சிரிக்க அன்பை அளித்தணைத்தாயே (2)
வாழும் உலகில் அனைவரும் ஒன்றே யாரும் ப்ரேமை உருவகம் என்றே
வேதம் உரைக்கும் உண்மை சொன்னாயே சாயி உந்தன் அன்பு தந்தாயே
(music)
என்றும் கோபம் நீ கொண்டதில்லை உயிரில் பேதம் நீ கண்டதில்லை (2)
அன்பைக் கொடுத்தே அன்பால் நிறைத்தே உலகு முழுதும் கவர்ந்னை சாயி (2)
வாழும் உலகில் அனைவரும் ஒன்றே யாரும் ப்ரேமை உருவகம் என்றே
வேதம் உரைக்கும் உண்மை சொன்னாயே சாயி உந்தன் அன்பு தந்தாயே
ம்..ம்ம்

முதல்பக்கம்


No comments:

Post a Comment