Wednesday, February 16, 2022

583.நாவில் சாயி எனும் பெயர் கூறி(பாலும் பழமும் கைகளில் ஏந்தி)

ம்..ம்ம் 
(Interlude)
நாவில் சாயி எனும்-பெயர் கூறி உதவும்-கரத்தால் சேவையை ஆற்றி
உலகில்-வாழ்ந்தால் அதனுக்கும்-மேலே வேறு இல்லை ஆராதனையே
(2)
(music)
பஞ்சின் இதயம் ஆராதனையே கொடுக்கும் இதமும் ஆராதனையே (2)
துடிக்கும் மனிதர் படும் வேதனையை விலக்கும் எதுவும் ஆராதனையே (2)
நாவில் சாயி எனும்-பெயர் கூறி உதவும்-கரத்தால் சேவையை ஆற்றி
உலகில்-வாழ்ந்தால் அதனுக்கும்-மேலே வேறு இல்லை ஆராதனையே
(music)
சாயி நாம சங்கீர்த்தனமே கேட்க மனதும் உருகும் விதமே (2)
பாடும்-போதும் ஆராதனையே சாயி-கீதம் ஆராதனையே 
சாயி நாமம் ஆராதனையே சாயி கீதம் ஆராதனையே
நாவில் சாயி எனும்-பெயர் கூறி உதவும்-கரத்தால் சேவையை ஆற்றி
உலகில்-வாழ்ந்தால் அதனுக்கும்-மேலே வேறு இல்லை ஆராதனையே
(music)
செயலில் துணிவு ஆராதனையே சொல்லில் பணிவு ஆராதனையே (2)
கல்லின் பொறுமை ஆராதனையே வெல்லும் மேன்மை முடிவாய்த் தருமே (2) 
நாவில் சாயி எனும்-பெயர் கூறி உதவும்-கரத்தால் சேவையை ஆற்றி
உலகில்-வாழ்ந்தால் அதனுக்கும்-மேலே வேறு இல்லை ஆராதனையே
ம்..ம்ம்




No comments:

Post a Comment