Saturday, January 22, 2022

579. எல்லாருக்கும் தரும் மன நிம்மதி(புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே)

 


எல்லாருக்கும் தரும் மன நிம்மதி 
சத்ய சாயீசப் பெருமானின் திருச் சன்னதி
(sm)
எல்லாருக்கும் தரும் மன நிம்மதி 
சத்ய சாயீசப் பெருமானின் திருச் சன்னதி
பொல்லாருக்கும் ஊழின் வினையின் விதி 
செல்ல வழி காட்டும் ஸ்ரீ சாயி அன்பின் நிதி 
பொல்லாருக்கும் ஊழின் வினையின் விதி 
செல்ல வழி காட்டும் ஸ்ரீ சாயி அன்பின் நிதி 
எல்லாருக்கும் தரும் மன நிம்மதி 
சத்ய சாயீசப் பெருமானின் திருச் சன்னதி
(MUSIC)

அந்தோ மனம் கலங்கும் வண்ணம் அடி 
தர தினம்-வந்து நமைத்-தாக்கும் இடர்ப்-பேரிடி 
அந்தோ மனம் கலங்கும் வண்ணம் அடி 
தர தினம்-வந்து நமைத்-தாக்கும் இடர்ப்-பேரிடி 
சென்றோடி நம்மை விட்டுப் போகும்படி 
அய்யன் ஒரு பார்வை செய்யும் இடர் ஆகும் பொடி 
அய்யன் ஒரு பார்வை போதும் இடர் ஆகும் பொடி
எல்லாருக்கும் தரும் மன நிம்மதி 
சத்ய சாயீசப் பெருமானின் திருச் சன்னதி
(MUSIC)

வழி காட்டும் மறைநான்கின் கருவானவர் 
அவர் நமை-காக்கும் அருள்-ப்ரேமை உருவானவர்
வழி காட்டும் மறைநான்கின் கருவானவர்
அவர் நமை-காக்கும் அருள்-ப்ரேமை உருவானவர்
என் செய்குவேன் என்று வருவார்-பலர்
தன்னை வா-வென்று தான் அள்ளிக் கொள்கின்றவர்
கண்ணே வா-வென்று தான் அள்ளிக் கொள்கின்றவர்
எல்லாருக்கும் தரும் மன நிம்மதி 
சத்ய சாயீசப் பெருமானின் திருச் சன்னதி
(MUSIC)
நமக்காக அருள்-காட்ட என்றும் இருப்பார் 
மன ஆறுதல் தான்-கொடுக்க என்றே இருப்பார்
நமக்காக அருள்-காட்ட என்றும் இருப்பார் 
மன ஆறுதல் தான்-கொடுக்க என்றே இருப்பார்
சோர்ந்தவர்க்கு பரிவை அந்த அய்யன் கொடுப்பார் 
நாம் விழுவதற்கு முன்னே நம்மை வாரி எடுப்பார்
நாம் அழுவதற்கு முன்னே வந்து கண்ணைத் துடைப்பார்
எல்லாருக்கும் தரும் மன நிம்மதி  
சத்ய சாயீசப் பெருமானின் திருச் சன்னதி
பொல்லாருக்கும் ஊழின் வினையின் விதி 
செல்ல வழி காட்டும் ஸ்ரீ சாயி அன்பின் நிதி 
எல்லாருக்கும் தரும் மன நிம்மதி 
சத்ய சாயீசப் பெருமானின் திருச் சன்னதி...

சாயி கீதம்-6

முதல்பக்கம்


No comments:

Post a Comment