Saturday, January 22, 2022

578. அழகுச் சிலை போல(மலர்ந்தும் மலராத) **

 அழகுச் சிலை போல மெழுகு நடை போட்டு நடந்து மண்மீதிலே
வந்து கண்ணே பங்காரு என்று குரலாலே  வருடுவாய் காதிலே
தமிழில் குளிப்பாட்டி இசையில் உனைப்பாடி நடத்தும் அபிஷேகமே
மனதினிக்கும் பெயர்-சாயி சாயி எனக்கூறி தொடங்கும் உயர்யோகமே
(SM)
அழகுச் சிலை போல மெழுகு நடை போட்டு நடந்து மண்மீதிலே
வந்து கண்ணே பங்காரு என்று குரலாலே  வருடுவாய் காதிலே
தமிழில் குளிப்பாட்டி இசையில் உனைப்பாடி நடத்தும் அபிஷேகமே
மனதினிக்கும் பெயர்-சாயி சாயி எனக்கூறி தொடங்கும் உயர்யோகமே
(MUSIC)

அன்பின் துணை கொண்டு பண்பை மனம்தந்து மாற்றம் புரிந்தாயய்யா மன மாற்றம் புரிந்தாயய்யா
இந்த உலகில் நீ ஒன்றி பேதம் துளி இன்றி சேவை புரிந்தாய் ஐய்யா பாதை தந்தாய் அய்யா 
இந்த உலகில் நீ ஒன்றி பேதம் துளி இன்றி 
இந்த உலகில் நீ ஒன்றி
பேதம் துளி இன்றி 
சேவை புரிந்தாய் ஐய்யா
(SM)
உந்தன் அவதாரம் என்ற நிஜம் எண்ணி மாந்தர் பயம் காட்டுவார் 
உனைக் கண்டு பயம் காட்டுவார்
நீயும் அந்த பயம்  போக தந்தை வடிவாக அணைத்து இதம் காட்டுவாய் மனதில் இதம் கூட்டுவாய்  
நீயும் அந்த பயம்  போக தந்தை வடிவாக
நீயும் அந்த பயம்  போக  
தந்தை வடிவாக 
அணைத்து இதம் காட்டுவாய்
(music)
தமிழில் குளிப்பாட்டி இசையில் உனைப்பாடி நடத்தும் அபிஷேகமே
மனதினிக்கும் பெயர்-சாயி சாயி எனக்கூறி தொடங்கும் உயர்யோகமே
(music)

பிறகு எனக்கூறி இறைவன் உனைப்-போற்ற மறந்த எனைக் காக்க வா
உன்னை மறுக்காத ஞானம் நீ தந்து பிள்ளை எனைத் தூக்க வா
பிள்ளை எனைத் தூக்க வா
என்னை சேய்-போல உன்னை தாய் போல நினைத்து பொறுப்பாய் ஐயா
எந்தன் ஜென்மம்-கடைத்தேறும் வழியை-மறுக்காமல் அருளிச் செய்-சாயிராம் 
அய்யே அருளிச் செய்-சாயிராம் 
சாயி ராம்ராம சாயி ராம்ராம சாயி ராம்ராமராம் 
சத்ய சாயி ராம்ராம சாயி ராம்ராம சாயி ராம்ராமராம்
சத்ய சாயி ராம்-ராம ராம் ..

சாயி கீதம்-6

முதல்பக்கம்


No comments:

Post a Comment