Monday, November 29, 2021

572. இதோ சாயி சேவை செய்யும்(அதோ அந்த பறவை போல) **


இதோ சேவை செய்யும் சாயித் தொண்டர் பாரு
ஏதோ என்று தேடி ஓடிச் செய்கிறாரு
இதே போலவே இவர் நாளுமே 
சேவை செய்ய சாயி அருள வேண்டுவோம்
இதோ சேவை செய்யும் சாயித் தொண்டர் பாரு
ஏதோ என்று தேடி ஓடிச் செய்கிறாரு
இதே போலவே இவர் நாளுமே 
சேவை செய்ய அருளுவாயே சாயிராம்
(MUSIC)

அடாடா  ..அடாடா  ..அடாடா   ..அடாடா
(SM)
நேற்று-இன்று என்ற-கணக்கு இதற்கு-இல்லையே
ஸ்வாமி சொல்லித் தந்த சேவை தொடரும் என்றுமே
தொடரும் என்றுமே
வாழ்வின் நியதி சேவை என்று கொண்ட பின்னரே
சாயி அருளும் கிடைக்கும் அதனில் ஐயம் இல்லையே
இதே போலவே இவர் நாளுமே 
சேவை செய்ய சாயி அருள வேண்டுவோம்
இதோ சேவை செய்யும் சாயித் தொண்டர் பாரு
ஏதோ என்று தேடி ஓடிச் செய்கிறாரு
இதே போலவே இவர் நாளுமே 
சேவை செய்ய அருளுவாயே சாயிராம்

(MUSIC)
அடாடா  ..அடாடா  ..அடாடா  அடாடா 
(MUSIC)
நோன்பு-போல சேவை-தன்னைக் கொண்ட-பின்னரே
கேட்டிடாமல் அருள் விடாமல் பொழியும் வாழ்விலே
பொழியும் வாழ்விலே
என்ற சாயி வாக்கைக் கொண்ட தொண்டர் நெஞ்சிலே   
உலக மாய வாழ்வில் தோன்றும் துன்பம் இல்லையே
இதே போலவே இவர் நாளுமே 
சேவை செய்ய சாயி அருள வேண்டுவோம்
இதோ சேவை செய்யும் சாயித் தொண்டர் பாரு
ஏதோ என்று தேடி ஓடிச் செய்கிறாரு
இதே போலவே இவர் நாளுமே 
சேவை செய்ய அருளுவாயே சாயிராம்

(MUSIC)
அடாடா  ..அடாடா  ..அடாடா  ..அடாடா 
(MUSIC)
கோடி-ஜென்மம் புரிந்த-வினைகள் கழிந்து பெருநிலை
அடைய நமக்கு சாயி தந்த சேவை உயர்கலை 
சேவை எனும் கலை
மிச்சமின்றி வினைகள்-கழியத் தோன்றும் விடுதலை
அதனை நமக்கு அளிக்கும் சாயி அன்புப் பேரலை 
இதே போலவே இவர் நாளுமே 
சேவை செய்ய சாயி அருள வேண்டுவோம்
இதோ சேவை செய்யும் சாயித் தொண்டர் பாரு
ஏதோ என்று தேடி ஓடிச் செய்கிறாரு
இதே போலவே இவர் நாளுமே 
சேவை செய்ய அருளுவாயே சாயிராம்


சாயி கீதம்-6

முதல்பக்கம்


No comments:

Post a Comment