Sunday, December 27, 2020

555. பூப்போலுன் சிரிப்பினையே(பாவாடை தாவணியில்) **



பூப்போலுன் அன்பினையே தந்த சாயிமா உன்
பேச்சாலே களிப்பெனக்கு தந்த சாயிமா
பூப்போலுன் அன்பினையே தந்த சாயிமா
கேட்டாலே காதினிக்கும் உன்குரல் தேனோ
விழியூறும் அருளினிலே உய்ந்திடுவேனோ
பூப்போலுன் அன்பினையே தந்த சாயிமா 
(MUSIC)
உன்-பேச்சில் இல்லாத போதம்-ஏதம்மா நீ
கண்வீச்சில் தந்ததெல்லாம் பாடம் தானம்மா
(2)
வில்லொன்றைக் கொண்டாய்-நீ புருவமாய்-அம்மா பார்வைக் கணையதில்-நீ தொடுத்தாலே உய்யுவேனம்மா
பூப்போலுன் அன்பினையே தந்த சாயிமா 
 (MUSIC)
சொத்து-பத்து வேறெதுவும் எனக்கு வேணுமா-நீ
எங்கள்-சொத்தாய் வந்தபின்னே வேறு-ஏனம்மா
(2)
என்னுயிரே இன்னுயிரே அமுதக்கிண்ணமே..
மண்ணினுக்கே கண்ணெனவே வந்த சின்னமே
பூப்போலுன் அன்பினையே தந்த சாயிமா 
 (MUSIC)
கண்ணே-என் திரு உருவம் மறைந்து விட்டாலும்-பார்
இன்றுடனே சுழலுவதை நிறுத்திவிட்டாலும்
(2)
அருவுருவாய் உன்னுடனே மறைந்து-எந்நாளும்-நான்
இருந்திடுவேன் என்றல்லவோ உறுதி கூறினாய்
பூப்போலுன் அன்பினையே தந்த சாயிமா உன்
பேச்சாலே களிப்பெனக்கு தந்த சாயிமா
பூப்போலுன் அன்பினையே தந்த சாயிமா
கேட்டாலே காதினிக்கும் உன்குரல் தேனோ
விழியூறும் அருளினிலே உய்ந்திடுவேனோ
பூப்போலுன் அன்பினையே தந்த சாயிமா




 



No comments:

Post a Comment