Friday, March 26, 2021

560. சாயி உந்தன் பேரிருக்க(ஆறு படை வீடு கொண்ட) ****


(Aligned to KARAOKE)

காவியுடை மேனிகொண்ட சாயி பெரும

காவியுடை மேனிகொண்ட சாயி பெரும
அழுமனமாற்றுக்கடைக்கண்ணிலே அருள்சொரிவாய் பாபா
(2)
காவியுடை மேனிகொண்ட சாயி பெரும
வாட்டிடும் வினைகளையே கண்ணைக் கொண்டே (2)
அன்பைக் காட்டிக் களைவதற்கே மண்ணில் வந்தே 
அன்பைக் காட்டிக் களைவதற்கே மண்ணில் வந்தே பாபா
காவியுடை மேனிகொண்ட சாயி பெரும 
(MUSIC)
தோண்டிய கிணறும்-வற்ற உலகினுக்கு அன்று தெள்ள தெளிந்த-சுவை நீரளித்து.. ஆ.. ஆ
தோண்டிய கிணறும்-வற்ற உலகினுக்கு அன்று தெள்ள தெளிந்த-சுவை நீரளித்து
வேண்டியதெலாமளித்து பார்மீது (2)
நீ கொடுத்த அன்புக்கு-ஒரு இணை ஏது (2)
காவியுடை மேனிகொண்ட சாயி பெரும 
(MUSIC)
ஒருவரும் வைத்தியத்தில் செலவழித்து அந்த
மாபெரும் மருத்துவத்தில் பொருள் இழந்து
(2)
நன்மைகள் ஒருகாலும் அடைந்ததில்லை (2)
என்றே மருத்துவ சேவை தந்தார் சாயித்தந்தை
மருத்துவ சேவை தந்தார் சாயித்தந்தை
காவியுடை மேனிகொண்ட சாயி பெரும 
(MUSIC)
மாந்தர்-படும் துயரைப் பொருட்படுத்தி

மாந்தர்-படும் துயரைப் பொருட்படுத்தி
தோள்கள் தனைக் கொடுத்து 
என்றும் உடன் இருந்து
(2)
பூவைக்கொண்டே அமைந்த மனம் பாரு (2)
கடல் மிஞ்சும்சாயீசன் தரும் அருள்பாரு
கடல் மிஞ்சும்சாயீசன் தரும் திருநீறு
காவியுடை மேனிகொண்ட சாயி பெரும
(MUSIC)
குருவடிவாய் வந்து நலமோடு நல்லகலைகளுமாகத் தரும் அறிவோடு(2)
கலைமகள் கோவில்கொண்ட ஒரு வீடு (2)
சாயி பல்கலைக் கழகம்-என்னும் திருவீடு (2) ... பாபா..
காவியுடை மேனிகொண்ட சாயி பெரும
(MUSIC)
மேகம்எனப் பொழிந்து நீரளித்து 
சாயி அள்ளிச்சுவைஉணவு தனைக்கொடுத்து
(2)
சேவை முடிந்ததென்று அமர்ந்ததில்லை (2)
எங்கள் அன்னைக்குலகில் துளி ஓய்வுமில்லை
துளியுமில்லை சிறுதுளியுமில்லை 
காவியுடை மேனிகொண்ட சாயி பெரும
(MUSIC)
நல்லுணர்வோடு-வரும் அடியவர்க்கு அடியவர்க்கு

நல்லுணர்வோடு-வரும் அடியவர்க்கு
நல்ல காட்சி-தந்து உடனே கருணை-தந்து
(2) 
அள்ளித் தந்தானே-அருள் திருநீறை (2)
மண்ணில்-வந்து விளையாடும் அவன்பதம் நாளை
வந்து-விளையாடும் அவன்பதம்நாளை...
பாபா
காவியுடை மேனிகொண்ட சாயி பெரும
அழுமனமாற்றுக் கடைக்கண்ணிலே அருள்சொரிவாய் பாபா
காவியுடை மேனிகொண்ட சாயி பெரும.. பாபா.. பாபா


முதல்பக்கம் 





No comments:

Post a Comment