Wednesday, July 31, 2024

653.நீ பங்காரு என்பாயே சாயி(நீ என்னென்ன சொன்னாலும்) ***


 நீ பங்காரு என்பாயே சாயி
மனம்  ஏங்காதோ அதைக் கேட்க பூமி
நீ பங்காரு என்பாயே சாயி
மனம்  ஏங்காதோ அதைக் கேட்க பூமி
நீ தந்தாயே உன் ப்ரேமை ஸ்வாமி
அதைக் கண்ணாலே நீ மீண்டும் காண்பி
நீ தந்தாயே உன் ப்ரேமை ஸ்வாமி
அதைக் கண்ணாலே நீ மீண்டும் காண்பி
ஸ்வாமி... ஸ்வாமி..
(இசை)

சின்னஞ்சிறு நடை எதிரினில் நடந்து (2)
ஐயே கொஞ்சம் வந்து அன்பெனும் மருந்து (2)
தந்தே உய்த்திடு வல்வினை களைந்து (2)
உந்தன் தரிசனம் அது சுவை விருந்து
அறு சுவை விருந்து
நீ பங்காரு என்பாயே சாயி
மனம்  ஏங்காதோ அதைக் கேட்க பூமி
(இசை)

உந்தன் தரிசன விருந்தினை அருந்தி (2)
உந்தன் எதிரினில் சிலையெனப் பொருந்தி (2)
உள்ள பக்தர்கள் கூட்டமும் கிறங்கி (2)
ஐயே இருக்குது வா நீ இறங்கி
வா வா இறங்கி
நீ பங்காரு என்பாயே சாயி
(இசை)

உன்னை உலகினில் மானிடப் பிறப்பு
தன்னில் அருகினில் கண்டிடும் சிறப்பு
தந்த சுகத்தினில் உலகமும் இருக்கு
வந்தே எடுத்திடு உலகினில் பிறப்பு..அது உன் பொறுப்பு
நீ பங்காரு என்பாயே சாயி
மனம்  ஏங்காதோ அதைக் கேட்க பூமி
நீ தந்தாயே உன் ப்ரேமை ஸ்வாமி
அதைக் கண்ணாலே நீ மீண்டும் காண்பி

ஸ்வாமி... ஸ்வாமி..


சாயி கீதம்-7

முதல்பக்கம்



No comments:

Post a Comment