Wednesday, April 12, 2023

620. கண்ணால் காதால்(புத்தன் ஏசு காந்தி பிறந்தது) **


கண்ணால்-காதால் பார்ப்பதில்-கேட்பதில் ஆசைகள் உருவாக
சேவை அதை விடு..வதற்காக
புலனை தொடர்ந்தே ஓடிடும் மனதை அடக்கணும் கணக்காக
அது-வை..ராக்யம் தரும் என இருக்குது சாயியின் வாக்காக
வேள்விகள் என்னும் யாகமும் யக்ஞமும் செய்வது போலாக 
சேவையும் இருக்குது என்பதைச் சொன்னார் சாயியும் நமக்காக
கண்ணால்-காதால் பார்ப்பதில்-கேட்பதில் ஆசைகள் உருவாக
சேவை அதை விடு..வதற்காக

(MUSIC)
இறை-தன்னை நெஞ்சில் சிறை-என்று கொண்டு
துயர்-கொண்ட நெஞ்சம் தனைச்-சென்று கண்டு
மனம் தன்னில்-அன்பு தனைக்-கொண்டு நன்கு
உயர்-சேவை ஒன்று செய்வாயே இன்று
சேவை செய்திடு என்று சொன்னது தெய்வத்தின் மொழியாகும்
உண்மை என்றுதன் பேரைக் கொண்டது காட்டிய வழியாகும்
கண்ணால்-காதால் பார்ப்பதில்-கேட்பதில் ஆசைகள் உருவாக
சேவை அதை விடு..வதற்காக
(MUSIC)

 பொருள் கொண்டு-பூஜை தனை-வேண்ட..வில்லை
பொருள் கண்டு-தெய்வம் அருள் தந்ததில்லை
மனம்-கொண்ட அன்பில் இலை-ஒன்று போதும்
அளிப்பாயே என்றே சாயி சொன்ன பாடம்
ஆசைகள் தீர்த்திட வரங்களைக் கேட்டிட புரிவது பூஜையில்லை
மன-அலை ஓய்ந்திட சேவையைச் செய்திட வேறொன்றும் தேவையில்லை
கண்ணால்-காதால் பார்ப்பதில்-கேட்பதில் ஆசைகள் உருவாக
சேவை அதை விடு..வதற்காக
புலனை தொடர்ந்தே ஓடிடும் மனதை அடக்கணும் கணக்காக
அது-வை..ராக்யம் தரும் என இருக்குது சாயியின் வாக்காக
வேள்விகள் என்னும் யாகமும் யக்ஞமும் செய்வது போலாக 
சேவையும் இருக்குது என்பதைச் சொன்னார் சாயியும் நமக்காக
கண்ணால்-காதால் பார்ப்பதில்-கேட்பதில் ஆசைகள் உருவாக
சேவை அதை விடு..வதற்காக




Other SONGS Recorded


No comments:

Post a Comment