Wednesday, May 10, 2017

312. பாடும் பாடலிலே (ஓடும் மேகங்களே)**



பாடும் பாடலிலே  உன்மனமிறங்..காயோ
(SM) 
பாடும் பாடலிலே  உன்மனமிறங்..காயோ
வாடுமென் மனதினையே சாயிநீ அறியாயோ (2)
பாடும் பாடலிலே  உன்மனமிறங்..காயோ
(MUSIC)
பாரெல்லாம் உன்னருமை பெருமையை-உணர்ந்..ததனாலே
பாரிலுள்ள இதயங்களில் நீவந்து புகுந்த-பின்னாலே
(2) 
மானிடத்தின்வடிவோடு கண்டிடஏங்குதுநாடு வாஉடனே இப்போது
வருவாய் வந்திடாய் போதும் போதுமய்யா விளையாட்டு
பாடும் பாடலிலே  உன்மனமிறங்..காயோ
வாடுமென் மனதினையே சாயிநீஅறியாயோ (2)
(MUSIC)
நாளெல்லாம் கங்கையென நீர்பெருக்கும் என்-விழியும் 
இதயமெல்லாம் பிரிவுத்துயர் நிறைந்திருந்தே அதைப்பிழியும் 
(2)
தெரியலையே ஒருவழியும் எனக்கணம் யுகமாய்க் கழியும் உனக்கில்லையா இந்தப் பழியும்  

வருவாய் வந்திடாய் போதும் போதுமய்யா விளையாட்டு

பாடும் பாடலிலே  உன்மனமிறங்..காயோ
வாடுமென் மனதினையே சாயிநீஅறியாயோ (2)
பாடும் பாடலிலே உன்மனமிறங்..காயோ



No comments:

Post a Comment