Sunday, March 27, 2016

63. தேடும் நெஞ்சில் ஒளியாகி(தேவன் கோவில் மணியோசை)***



(தேவன் கோவில் மணியோசை)

தேடும்நெஞ்சில் ஒளியாகி..இங்கு வாடிடும் நெஞ்சில் வரும்சாயி (2)
பாவியென் மீதும் பாசத்தைக் காட்டி
பாட்டினில் வந்தாய் என்தாயே
தேடும் நெஞ்சில் ஒளியாகி.. இங்கு வாடிடும் நெஞ்சில் வரும்சாயி
(Music)
ஊனாய்ப் பிறந்தாய்த் தேனாய் வாழ்ந்தாய்
அன்பால் அணைத்தாய் எம்தாயே
(2)
தாங்காத் துயரில் கூவிஅழைத்தால்
தழுவும் தந்தை நீசாயி
பதில் விரைவினில் கூறும் எம்சாயி
பெரும் மதில்எனக் காக்கும் துணைசாயி 
தேடும் நெஞ்சில் ஒளியாகி.. இங்கு வாடிடும் நெஞ்சில் வரும்சாயி
(Music)
அருமைமகனே என்றேஅழைக்க விரைந்தேவருவாய் என்தாயே (2)
அம்மாஅம்மா என்றேஅழைக்க உலகினில்வேறே யார்சாயி 
உந்தன் குழந்தைகள் வாட்டத்தைப் பார்சாயி
இன்று விரைந்துநீ-ஓட்டத்தில் வாசாயி 
தேடும் நெஞ்சில் ஒளியாகி.. இங்கு வாடிடும் நெஞ்சில் வரும்சாயி
பாவியென் மீதும் பாசத்தைக் காட்டி பாட்டினில் வந்தாய் என்தாயே
தேடும் நெஞ்சில் ஒளியாகி.. இங்கு வாடிடும் நெஞ்சில் வரும்சாயி

No comments:

Post a Comment