Thursday, May 7, 2020

143. நில்லாத உலகில் (துள்ளாத மனமும்) **



நில்லாத-உலகில் மீண்டும்..பொல்லாத வினைகள் போக்கும்
சாயீசன் வருகைக்கு ஏங்கும்
சாயி வருகைக்கு ஏங்கும் 
மனம் சாயி வருகைக்கு ஏங்கும்
(2)
(MUSIC)
தூய வாழ்வில் நாளும்உயர ஏணியாவான் சா..யி (SM)
தூய வாழ்வில் நாளும்உயர ஏணியாவான் சா..யி
மாயப்பிறவிக் கடலைக்கடக்க தோணியாவதும் சாயி
நெஞ்சில் உதிரம் பெருகும் துன்பம்
துடைத்துக் களைந்திடும் சாயி
அணைக்குமவன் ஒரு தாயே
நமை  அணைக்குமவன் ஒரு தாயே
நில்லாத உலகில் மீண்டும்..பொல்லாத வினைகள் போக்கும்
சாயீசன் வருகைக்கு ஏங்கும்
சாயி வருகைக்கு ஏங்கும் மனம் சாயி வருகைக்கு ஏங்கும்
(MUSIC)
சோர்ந்தமனமும் சா..யிஅன்பால் சோகம்மறந்தே-மலர்ந்திடும்
(SM)
சோர்ந்தமனமும் சா..யிஅன்பால் சோகம்மறந்தே-மலர்ந்திடும்
நோயில்மடியும் உயிரைத்தன்பால் சாயிஅணைத்தே சுகம்தரும்
தன்கை உதிரும் நீரைக் கொண்டே
தொடரும் வினைகள் களைந்திடும்
உலகைத் தன்பால் ஈர்த்திடும் 
சாயி தெய்வ சத்யம் உணர்த்திடும்
நில்லாத உலகில் மீண்டும்..பொல்லாத வினைகள் போக்கும்
சாயீசன் வருகைக்கு ஏங்கும்
சாயி வருகைக்கு ஏங்கும்
மனம் சாயி வருகைக்கு ஏங்கும்





No comments:

Post a Comment