நெஞ்சமிருக்கு பூப்போலே
அவன் அன்புக்கில்லையே தாழ்ப்பாளே
கொஞ்சும் குரலில் சாயீசன் தரும்
அன்பைப் பருகுவோம் சிந்தாமே
1+இசை+1
கட்டிப் போடும் அவன் ப்ரேமை
இந்த பார் முழுதுமதற்கு அடிமை
(2)
பார்வை அதனில்
அன்பைக் குழைத்து
பார்வை அதனில் அன்பைக் குழைத்து சாயிதருவதே இனிமை
கொட்டும் நீறை விரல் அளிக்கும்
அதை வாங்கிக் கொள்ள மனம் துடிக்கும்
(2)
தேனைப் பழிக்கும்
சாயி அழைக்கும்
தேனைப் பழிக்கும் சாயி அழைக்கும்
வார்த்தை மயக்கம் கொடுக்கும்
பார்த்த பின்னரும் கேட்ட பின்னரும் (2)
கேள்வி என்ன
தேடல் என்ன
கேள்வி என்ன தேடல் என்ன
தேவையில்லை ஐயம்
நெஞ்சமிருக்கே பூப்போலே
அவன் அன்புக்கில்லையே தாழ்ப்பாளே
ஐயமிருக்கும் நெஞ்சத்திலே அது புகுந்து மாற்றிவிடும் தன்னாலே
(இசை)
பிறகு என்றிடல் முறையோ நம் மனதில் இன்னமும் திரையோ
(2)
மாயை கொடுக்கும்
தீரா மயக்கம்
மாயை கொடுக்கும் தீரா மயக்கம்
போக்கிக் கொள்வோம் வா வா
கருணை காட்டி நம்மை அழைப்பார்
நம்மைத் தன் பிள்ளை எனச் சொல்லி அணைப்பார்
(2)
நேரில் அழைத்து
நீரை அளித்து
நேரில் அழைத்து நீரை அளித்து கண்கள் பனித்திட அருள்வார்
பார்த்த பின்னரும் கேட்ட பின்னரும் (2)
கேள்வி என்ன
தேடல் என்ன
கேள்வி என்ன தேடல் என்ன
தேவையில்லை ஐயம்
நெஞ்சமிருக்கே பூப்போலே
அவன் அன்புக்கில்லையே தாழ்ப்பாளே
கொஞ்சும் குரலில் சாயீசன் தரும்
அன்பைப் பருகுவோம் சிந்தாமே