Saturday, May 6, 2017

423. கருணை காட்டிய(அண்ணன் காட்டிய வழியம்மா)


கருணை-காட்டிய விழியம்மா உயர்-சேவை அவனின் வழியம்மா 
அன்பே அவன்-வாய் மொழியம்மா அவன்முன்னே ஏதோர் பழியம்மா        
கருணை-காட்டிய விழியம்மா
(MUSIC)
கண்டால்-அருள்-தரும் அவன்-பாதம் கெடாமல்-தடுத்திடும் அவன்-போதம்
தெரிந்தே கிடைப்பது நீறாகும் தெரியாமல் நடப்பது மன மாற்றம்
கருணை-காட்டிய விழியம்மா
(MUSIC)
அடைக்கலம் தந்தான் புகல்-கொடுத்தான் 
நானிருக்கேன் கண்ணே என்றணைத்தான்
*அன்புருவே பொன்னே என்று நம்மை 
கூப்பிட்டு கைகளில் நீறளிப்பான் 
கருணை-காட்டிய விழியம்மா
(MUSIC)
அவனைத் துதித்தே நான் இருந்தேன் 
அவன் என்னைப் பிரிந்தே வான் பறந்தான்
நெஞ்சம் அவனை மறக்கவில்லை 
அவன் சத்தியம்-தான்-அதில் ஐயமில்லை
கருணை-காட்டிய விழியம்மா  
உயர்-சேவை அவனின் வழியம்மா 
அன்பே அவன் வாய் மொழியம்மா  
அவன் முன்னே ஏதோர் பழியம்மா        
கருணை-காட்டிய விழியம்மா




No comments:

Post a Comment