Saturday, May 6, 2017

105. கண்போல உலகிலே (கண்போன போக்கிலே )***



கண்போல உலகையே பார்க்கின்ற சாயி  
சேய் போல உயிரையே காக்கின்ற மாயி 
(SM)
கண்போல உலகையே காக்கின்ற சாயி  
சேய் போல உயிரையே பார்க்கின்ற மாயி 
தினம்-காண உலகிலே நடந்து-வந்த சாயி (2)
மனிதன்-போல பாரிலே வாழ்ந்த தெய்வம் சாயி (2)

கண்போல உலகையே பார்க்கின்ற சாயி  
சேய்-போல உயிரையே காக்கின்ற மாயி
(MUSIC)
நீ-பார்க்கும்  பார்வையில்  கனிவூற  வேண்டும்
நீ-சொல்லும் வார்த்தையில் தேனூற-வேண்டும்
(2)
ஊர்-பார்த்து உனைச்சாயி தூதென்று போற்றும்
நாள்-பார்த்து என் பாதம்  உன்-நெஞ்சில் தோன்றும் 
எனச் சொன்ன நம்  சாயி வாக்கொன்று போதும் 
கண்போல உலகையே பார்க்கின்ற சாயி  
சேய்-போல உயிரையே காக்கின்ற மாயி 
(MUSIC)
பொய்யான உலகத்தில்  சுகம்-தேடி வாழும் 
புரியாத பலபேர்க்கு நீ சொல்லவேண்டும்
நிஜமாக நாம்காண  நெஞ்சத்தில் தோன்றும்
ஒளியாகும் சாயீசன் என்கின்ற தீபம்
எனச் சொன்ன நம்  சாயி வாக்கொன்று போதும்
கண்போல உலகையே பார்க்கின்ற சாயி  
சேய்-போல உயிரையே காக்கின்ற மாயி
(MUSIC)
நிஜமல்ல நிலையல்ல நீவாழும் லோகம்
அதில்-காணும் பொருள் யாவும் நிலையாது-
போகும் 
எனச் சொன்ன  நம்சாயி பதம்ரெண்டு போதும்
சுவர்க்கத்தில் தோன்றாத  சுகம் அங்கு தோன்றும்  (2)
கண்போல உலகையே பார்க்கின்ற சாயி  
சேய்-போல உயிரையே காக்கின்ற மாயி
(MUSIC)



No comments:

Post a Comment