Tuesday, March 22, 2016

55. நான்கொண்ட ( நான்பேச நினைப்பதெல்லாம்)***




நான்பேச நினைப்பதெல்லாம்)


நான்கொண்ட நினைப்பெல்லாம் நீயாகவேண்டும்
நானாகநானின்றி நீயாகவேண்டும் நீயாகவேண்டும்
(Short Music)
நான்என்ற நினைப்பை-நீ தான்-போக்க வேண்டும்
நீபோக்க-வேண்டும் ..ம்ம்ம்..ம்ம்ம்..
நீயின்றி நானில்லை எனும்எண்ணம் வேண்டும் 
எனும்எண்ணம் வேண்டும் ..ம்ம்ம்..ம்ம்ம்..
(MUSIC)
பொன்னல்லபொருளல்ல நீவேண்டும் சாயீ நீவேண்டும் சாயீ..  
முன்வந்த அருள்போல வரவேண்டும்சாயீ  வரவேண்டும்சாயீ..
 (Short Music)
மண்மீது நான்வாழத் துணைவேண்டும் சாயி-உன் துணைவேண்டும் சாயீ
ம்ம்..ம்ம்.
கண்மூடும் கணம்-தன்னில் நீவேண்டும்சாயி-உன் அருள்வேண்டும் சாயீ
(Music)
கண்ணே கண்மணியே என்உயிரேநீ சாயி உயிரேநீ சாயீ
மண்ணில்நீ வரவேண்டு..மே-ப்ரேம-சாயி ஹேப்ரேம சாயி
(Short Music)
உன்னோடுஉரையாடி அருள்கொண்டபின்னே அருள்கொண்ட பின்னே
மண்ணோடு சுகம் நாடி வாழ்கின்றதெங்கே வாழ்கின்றதெங்கே

நான் கொண்ட நினைப்பெல்லாம் நீயாக வேண்டும்
நானாகநானின்றி நீயாகவேண்டும் நீயாகவேண்டும்
ம்ம்ம்..ம்ம்ம்.

No comments:

Post a Comment