Monday, March 21, 2016

47. காலையில் உதிக்கும் (ஆலயமணியின் ஓசையை) ***




காலையில் உதிக்கும் கதிரவன் நீசாயீ
அருள்மழை பொழியும் மேகமும் நீசாயீ
பெரும்-கருணைக்கடலே-சாயீ மனம்பாடும்-மா..மணியே
என்வினையின் விடிவேசாயீ விரைந்தோடும்-பயம்இனியே
 காலையில் உதிக்கும் கதிரவன் நீசாயீ
 (Music)
இளகும்நெஞ்சின் அன்பினிலே பர்த்திநாதன்தந்தான்அருளினையே
விழுந்திடவந்தே தூக்கிடுவான் அழுதிடும்கண்கள் துடைத்திடுவான்
அழுதிடும்கண்கள் துடைத்திடுவான்
கருணைக்கடலே-சாயீ மனம்பாடும்-மாமணியே
என்வினையின் விடிவேசாயீ விரைந்தோடும்-பயம்இனியே
காலையில்உதிக்கும் கதிரவன் நீசாயீ
(Music)
காயும்-கர்ம வினையினிலே வாடும்-உயிர்கள் உலகினிலே
ஓயும்-நெஞ்சம் யாவையுமே தாயாய் அணைக்கும்  என்னுயிரே
தாயாய் அணைக்கும்  என்னுயிரே
கருணைக்கடலே-சாயீ மனம்பாடும்-மாமணியே
என்வினையின் விடிவேசாயீ விரைந்தோடும்-பயம்இனியே
காலையில் உதிக்கும் கதிரவன் நீசாயீ
அருள்மழை பொழியும் மேகமும் நீசாயீ




No comments:

Post a Comment