Monday, August 24, 2015

20. நீ அன்போடு எமைக்காக்க வருகின்ற சாயி (நான் மலரோடு)***






( நான் மலரோடு )

நீ அன்போடு எமைக்காக்க வருகின்ற சாயி
வான் உலகாளும் தெய்வங்கள் பணிகின்ற சாமி

(2)

நீ இல்லாமல் ஏதிந்த சொர்க்கங்கள் ஸ்வாமி
உன் நினைவொன்றே அதைக் காட்டும் தன்னாலே சாயி
 

நீ அன்போடு எமைக்காக்க வருகின்ற சாயி
வான் உலகாளும் தெய்வங்கள் பணிகின்ற சாமி
(Music)

உனைஅன்போடு அழைக்கின்ற பேர்ஸ்வாமி ஸ்வாமி
நீ கனிவோடு அளிக்கின்ற பதில் ஏமிஏமி
(2)
உன்அருளாலே சுழல்கின்ற..தே-பூமி பூமி
உன் கடைக்கண்ணில் அருட்பார்வை நீகாமி காமி
(2)

நீ இல்லாமல் எதிந்த சொர்க்கங்கள் ஸ்வாமி
உன் நினைவொன்றே அதைக் காட்டும் தன்னாலே சாயி

நீ அன்போடு எமைக்காக்க வருகின்ற சாயி
வான் உலகாளும் தெய்வங்கள் பணிகின்ற சாமி
(Music)

எம்வினை-யாவும் தொடராமல் தொலைக்கின்ற ஸ்வாமி
உன்துணை-போதும் வேறந்த புகல்வேண்டும் ஸ்வாமி
(2)
உன் நினைவாலே அழுகின்ற..தே-இன்று பூமி
உன் முகம்காண வரவேண்டும் ஹேப்ரேம சாயி
உன் நினைவாலே... அழுகின்ற...தேஇன்று பூமி
உன் முகம்காண... வரவேண்டும்...ஹே-ப்ரேம சாயி
நீ இல்லாமல் எதிந்த சொர்க்கங்கள் ஸ்வாமி
உன் நினைவொன்றே அதைக் காட்டும் தன்னாலே சாயி

நீ அன்போடு எமைக்காக்க வருகின்ற சாயி
வான் உலகாளும் தெய்வங்கள் பணிகின்ற சாமி

சாயி கீதம்-1









No comments:

Post a Comment