Monday, June 8, 2015

9. கரைந்து கண்ணில் நீர் சொரிந்து(வளர்ந்த கலை ) ***



( வளர்ந்த கலை மறந்து விட்டாள் )


கரைந்துகண்ணில் நீர்சொரிந்து வேண்டினோம் பாபா
நீ விரைந்துமீண்டும் அவதரித்து மண்ணில்வா பாபா

(2 times)
நீயில்லாமல் எமக்குகதி வேறுயார் பாபா
எங்கள் மனம்மகிழ அன்புமொழி கூறவா பாபா

(2 times)
கரைந்துகண்ணில் நீர்சொரிந்து வேண்டினோம் பாபா
நீ விரைந்துமீண்டும் அவதரித்து மண்ணில்வா பாபா

(Music)
காவல்செய்து காக்குமெங்கள் தெய்வம்நீ பாபா( 2 times)
கூவல் கேட்டு வந்தணைக்கும் தாயும்நீ பாபா
எங்கள் கூவல் கேட்டு வந்தணைக்கும் தாயும்நீ பாபா
வாடும்மனதில் தேறும்மொழி கூறினாய் பாபா
நீ வாடும்மனதில் தேறும்மொழி கூறினாய் பாபா
எங்கள் நெஞ்சினிலே நிறைந்துநீயும் நிற்கிறாய் பாபா
மனதினிலே ஒளிகொடுக்கும் அன்புநீ பாபா
உன்னை மறந்திடவே எங்களினால் முடியுமா பாபா

கரைந்துகண்ணில் நீர்சொரிந்து வேண்டினோம் பாபா
நீ விரைந்துமீண்டும் அவதரித்து மண்ணில்வா பாபா

(Music)
தினமும்உன்னை பஜனைசெய்து பாடினோம் பாபா(2)
எங்கள் சேவையிலே உன்பதத்தை நாடினோம் பாபா(2)
நினைத்து உன்னை மனதினிலே உருகினோம் பாபா(2)
உந்தன் அருள்கொடுக்கும் ஒளியினிலே பெருகினோம் பாபா

கரைந்துகண்ணில் நீர்சொரிந்து வேண்டினோம் பாபா
நீ விரைந்துமீண்டும் அவதரித்து மண்ணில்வா பாபா

(Music)
நின்று எங்கள் மனதில் ஒளிரும் ஜோதிநீ பாபா(2)
இந்த அண்டம் முழுதும் படைத்துநிற்கும் ஆதிநீ பாபா(2)
 நீ இல்லாமல் வாடும்நாங்கள் சேய்களே பாபா(2)
உந்தன் மடியினிலே சேர்த்தணைக்கும் தாயும்நீ பாபா

கரைந்துகண்ணில் நீர்சொரிந்து வேண்டினோம் பாபா
நீ விரைந்துமீண்டும் அவதரித்து மண்ணில்வா பாபா
(2)


 நீ இல்லாமல் வாடும்நாங்கள் சேய்களே பாபா
உந்தன் மடியினிலே சேர்த்தணைக்கும் தாயும்நீ பாபா

(2)

கரைந்துகண்ணில் நீர்சொரிந்து வேண்டினோம் பாபா
நீ விரைந்துமீண்டும் அவதரித்து மண்ணில்வா பாபா
நீ விரைந்துமீண்டும் அவதரித்து மண்ணில்வா பாபா






No comments:

Post a Comment