Wednesday, June 17, 2015

14. சென்று மறைந்தது போதும் (தென்றல் உறங்கிய போதும்) ***


(தென்றல் உறங்கிய போதும்)

சென்று-மறைந்தது போதும் கொண்ட-உறக்கமும் போதும்
வந்து-பிறந்திடய்யா சாயி வந்து-பிறந்திடய்யா
மண்ணில் வந்து-பிறந்திடய்யா

(1+Music+1+Music)

கன்று கலங்கிடும் போது நின்று அழுதிடும் போது
நின்று ரசித்திடுமா? தாய்ப்பசு நின்று ரசித்திடுமா?
தாய்ப்பசு நின்று ரசித்திடுமா?

(2)
 (Music)
நீ-இருக்கையிலே-உன் சிரிப்பிருக்கையிலே சிரிப்பிருக்கையிலே
(Music)
உயிரின்மனதிலே-தோன்றும் கவலை-போகுமே கவலை-போகுமே 
நேசத்திலே வந்துசென்ற தந்தைநீயடா
பாசத்தையே அள்ளித்தந்த அன்னை தானடா

(2)
உன்னை நினைத்தே வாடும் உனது பதத்தை நாடும்
பிள்ளைகள் நாங்களடா உந்தன் பிள்ளைகள் நாங்களடா
உன் பிள்ளைகள் நாங்களடா

(Music)
ஆ ஆ ஆ ஆ
இதயவானிலே உன்னைக் கண்டு-கொள்ளவே கண்டு-கொள்ளவே
(Music)
உதவிடாமலே-வினைகள் செய்யும்-போதிலே செய்யும்-போதிலே
கலங்கிடாமல்-நாங்கள் வாழ உதவினாயடா
தயங்கிடாமல் ஓடிவந்து காத்த தாயடா
(2)
உன்னை-நினைத்தே வாடும் உனது-பதத்தைப் நாடும்
பிள்ளைகள்-நாங்களடா உந்தன் பிள்ளைகள்-நாங்களடா
உன் பிள்ளைகள் நாங்களடா

 சென்று-மறைந்தது போதும் கொண்ட-உறக்கமும் போதும்
வந்து-பிறந்திடய்யா சாயி வந்து-பிறந்திடய்யா
மண்ணில் வந்து-பிறந்திடய்யா

(Both)

No comments:

Post a Comment