Tuesday, June 9, 2015

10. உலகில் பிறந்த இறையே (நினைக்கத் தெரிந்த மனமே ) ***

( நினைக்கத் தெரிந்த மனமே )


உலகில்பிறந்த இறையே எமக்கு அருளைப் புரிந்தாயே
அளவில்லாமல் சாயீ எமக்கு அன்பைச்சொரிந்தாயே
சாயீ அன்பைச் சொரிந்தாயே
(1+Short Music+1)
(Short Music) 

பிழைகள்யாவும் புரிந்தோம் சாயீ மறந்துஏற்றாயே
மலர்ந்த முகத்தில்அன்பை எமக்கு நிறையத்தந்தாயே
அன்பை நிறையத் தந்தாயே
உலகில் பிறந்த இறையே எமக்கு அருளைப் புரிந்தாயே..
அளவில்லாமல் சாயீ எமக்கு அன்பைச் சொரிந்தாயே

சாயீ  அன்பைச் சொரிந்தாயே
(Music)
எடுத்தஅபயக் கரத்தில் எமக்கு.. நீறைக் கொடுத்தாயே
படுத்தும் மனதின்நோயை  கணத்தில்.. விலக்கி எடுத்தாயே
அறிவில் சிறந்துவிளங்க.. எமக்கு கல்வி தந்தாயே
விரைவில் பசியும்-நீங்க எமக்கு உணவுதந் தாயே.. தாயே உணவு-தந்தாயே
உலகில் பிறந்த இறையே எமக்கு அருளைப் புரிந்தாயே..
அளவில்லாமல் சாயீ எமக்கு அன்பைச் சொரிந்தாயே

சாயீ  அன்பைச் சொரிந்தாயே
(Music)
கொதிக்கும் உயிரின் நெஞ்சை சாயீ குளிர வைத்தாயே
உறைந்து போன நெஞ்சில் சாயீ உயிரைத் தந்தாயே
உயிர்கள் உயரத் தேவை நெஞ்சில் சேவை என்றாயே
சேவை செய்து தாயே நீயும் உயரப் பறந்தாயே சாயீ உயரப் பறந்தாயே
உலகில் பிறந்த இறையே எமக்கு அருளைப் புரிந்தாயே..
அளவில்லாமல் சாயீ எமக்கு அன்பைச் சொரிந்தாயே

சாயீ அன்பைச் சொரிந்தாயே

No comments:

Post a Comment