Saturday, May 27, 2017

512. சொல்வோம் நீ வா (செந்தூர் முருகன் கோவிலிலே ) **




சொல்வோம் நீ வா சாயிபிரானின் பேரினைச் சொல்வோம் வா
 நீவா
பாபம்-போக்கும் சோகம்-போக்கும் நாமத்தைச்சொல்வோம் வா
நாமத்தைச்சொல்வோம் வா
(1+Music+1)
உன்னிரு விழியின் நீரினைக் கண்டு துடைத்திட வருவான் அம்மா
(2)
உன்னிரு கையின் சே..வை-கண்டு மகிழ்ந்திடும் நம்-சாயிமா
சொல்வோம் நீ வா சாயிபிரானின் பேரினைச் சொல்வோம் வா
 நீவா
பாபம்-போக்கும் சோகம்-போக்கும் நாமத்தைச்சொல்வோம் வா
நாமத்தைச் சொல்வோம் வா
(Music)
கெஞ்சும் குரலில்-நீ ஹே-சாயி என்றால் ஓடோடி வருவானம்மா  
(2)
சுந்தரத் தெலுங்கில் தேனின் குரலில் பங்காரு என்பானம்மா
பங்காரு என்பானம்மா
சொல்வோம் நீவா சாயிபிரானின் பேரினைச் சொல்வோம் வா
 நீவா
பாபம்-போக்கும் சோகம்-போக்கும் நாமத்தைச்சொல்வோம் வா வா
நாமத்தைச்சொல்வோம் வா
(music)
காலை எழுங்கால் நாவினில் சாயி என்றே நீ எழுவாயம்மா (2)
ஸ்வாமியும் தானும் ஓடி வந்தே உன்னோடு நிற்பானம்மா 
சேவையை விரும்பி பூமியில் வருந்தி உள்ளோர்க்குச் செய்வாயம்மா (2)
பின்னவன் உன்னை அன்பில் அழைத்து தன்னிடம் சேர்ப்பானம்மா தன்னிடம் சேர்ப்பானம்மா
சொல்வோம் நீ வா சாயிபிரானின் பேரினைச் சொல்வோம் வா
 நீவா
பாபம்-போக்கும் சோகம்-போக்கும் நாமத்தைச்சொல்வோம் வா
நாமத்தைச்சொல்வோம் வா




No comments:

Post a Comment