Thursday, May 4, 2017

508. செல்வனென்றா பிறந்தான்(கொடுத்ததெல்லாம் கொடுத்தான்)**



செல்வனென்றா பிறந்தான் அவன்-எளிய வீட்டில் பிறந்தான்
மன்னனென்றா வாழ்ந்தான் சாயி தொண்டனாக உழைத்தான்
(2) 
மன்னனென்றா வாழ்ந்தான் சாயி தொண்டனாக உழைத்தான்
 (MUSIC)
மண்குடிசை வாசம்கொண்டான் தலையணையாய்க் கையைக் கொண்டான் 
சுவையுமிலா கூழையன்றோ தினமுமவன் குடித்துவந்தான்
சுகமான-வாழ்க்கை சொகுசான-போக்கை ஒருபோதும்-சாயி கொண்டதில்லை  
செல்வனென்றா பிறந்தான் அவன்-எளிய வீட்டில் பிறந்தான்
மன்னனென்றா வாழ்ந்தான் சாயி தொண்டனாக உழைத்தான்
 (MUSIC)
படைத்தவனே இறங்கிவந்தான் பசித்தவர்மேல் பாசம் கொண்டான்
தடுப்பதற்கே பிறப்பெடுத்தான் பிறப்பினுக்கே சிறப்பைத்  தந்தான்
அவன்போல-அன்பை முழுதாக-மண்ணில் 
ஒருபோதும் -தெய்வம் கொடுத்ததில்லை
செல்வனென்றா பிறந்தான் அவன்-எளிய வீட்டில் பிறந்தான்
மன்னனென்றா வாழ்ந்தான் சாயி தொண்டனாக-உழைத்தான்
(MUSIC)
இல்லை-என்றே சொல்லிடுவான் இல்லை-என்னும் சொல்லை-ஒன்றே
விழி-வழிய அன்பிருக்கும் மனம்-நிறைய அது கொடுக்கும் அன்பென்ற-ரூபம் நம்-ரூபம்-என்று அழகாக-நமக்குப் புரிய வைத்தான்
செல்வனென்றா பிறந்தான் அவன்-எளிய வீட்டில் பிறந்தான்
மன்னனென்றா வாழ்ந்தான் சாயி தொண்டனாக-உழைத்தான் (2)

No comments:

Post a Comment