Monday, May 8, 2017

362. பொன் பொருள் வேண்டாம் (பொன்மகள் வந்தாள் ) ***




பொன்-பொருள் வேண்டாம் பணம்-கோடி வேண்டாம் 
சாயீசன் நாமம்-ஒன்றே போதாதோ
கண்ணிமை போலே அது-காக்கும் நம்மை 
சீராட்டுமே அன்பிலே
பொன்-பொருள் வேண்டாம் பணம்-கோடி வேண்டாம் 
சாயீசன் நாமம் ஒன்றே போதாதோ
(MUSIC)
 முக்திக்குன் நினைப்பை இழுக்கும் 
சித்திக்கும் நினைப்பில் சிறப்பும் 
(2)
ஞா..னமா..க
சொர்க்கத்தின் வனப்பைப் படைக்கும் 
சித்தத்தில் திறத்தைக் கொடுக்கும் யோ..கமா..க
சொல்லும்வாய் அனுதினம் தோன்றுமே நவரசம்  
ஜோதியின் சுடர்வரும் பின்னெலாம் பரவசம்
பொன்-பொருள் வேண்டாம் பணம்-கோடி வேண்டாம் 
சாயீசன் நாமம் ஒன்றே போதாதோ
(MUSIC)
மாயத்தின் அணைப்பில் கிடக்கும் 
ஜென்மத்தில் விழிப்பைக் கொடுக்கும் 
(2)
சாயி நாமம் 
பொய்யென்னும் இகத்தைத் தடுக்கும் 
மெய்யென்னும் பரத்தைக் கொடுக்கும் சாயி நாமம்
அமுதமாம் கனிரசம் நாமமே இதுநிஜம் 
சொல்லுவாய் நீதினம் செல்லுவாய் அவன் வசம்
பொன்-பொருள் வேண்டாம் பணம்-கோடி வேண்டாம் 
சாயீசன் நாமம் ஒன்றே போதாதோ
கண்ணிமை போலே அதுகாக்கும் நம்மை 
சீராட்டுமே அன்பிலே
பொன்-பொருள் வேண்டாம் பணம்-கோடி வேண்டாம் 
சாயீசன் நாமம் ஒன்றே போதாதோ...
(MUSIC)



No comments:

Post a Comment