Wednesday, May 10, 2017

291. புத்தன் ஏசு (புத்தன் ஏசு காந்தி) **




 புத்தன் ஏசு அந்த ஜொராஷ்டிரர் வடிவினில் சிறப்பாக
சாய்ராம் பிறந்தான் நமக்காக 
சிந்தையிலவனைக் கொண்டிருப்பவனைக் காத்திடும் பேராக
நாளும் நினைத்து நாவில் உரைத்துக் வாழணும் நேராக
கேள்விக்கெல்லாம் பதிலும்-கிடைக்கும் ஐயமும் எதற்காக 
வானம் என்றே பொழியும் சாயி அன்பும் நமக்காக 
புத்தன் ஏசு அந்த ஜொராஷ்டிரர் வடிவினில் சிறப்பாக
சாய்ராம் பிறந்தான் நமக்காக 
 (MUSIC)
அறம் குன்றும்போது அருள்-கொண்டு வந்து 
உழல்கின்ற போது துணை என்று-வந்து
அழும் நெஞ்சு பார்த்து புகல் தந்துவந்து
எதிர்பார்ப்பு இன்றி  எல்லோர்க்கும் தந்து 
உண்மை வடிவினில் அன்று  வந்தது தெய்வத்தின் பிறப்பாகும் 
ப்ரேமை ஒன்றுதான் சாயி நெஞ்சினில் என்றைக்கும் உருவாகும்
புத்தன் ஏசு அந்த ஜொராஷ்டிரர் வடிவினில் சிறப்பாக
சாய்ராம் பிறந்தான் நமக்காக 
(MUSIC)
அருள் உண்ட நாங்கள் பொருள்  வேண்டவில்லை
வெறும் பையில் கோடிப் பணம் வேண்டவில்லை 
புலம் வந்த சாயி பிறப்பொன்று போதும்
எனப்பாடும் எங்கள் நெஞ்சம் என்று ஆறும்
அழுதகண் துடைப்பதும் எடுத்தெமைஅணைப்பதும் செய்வது எங்களன்னை  
ஆயிரம் அன்னைகள் சேர்ந்துருக் கொண்டது ஈஸ்வரி கொண்ட பிள்ளை  
புத்தன் ஏசு அந்த ஜொராஷ்டிரர் வடிவினில் சிறப்பாக
சாய்ராம் பிறந்தான் நமக்காக 





No comments:

Post a Comment