Friday, May 12, 2017

232. அன்புசெய் என்றான் (அச்சம் என்பது மடமையடா)**



அன்..புசெய் என்றான் சா..யிபிரான்
இதுதான் வேதமும் பைபிள்-குர்ரான் (2) 
(slow pace )
_________________________________________________
அன்..புசெய் என்றான் சா..யிபிரான்
இதுதான் வேதமும் பைபிள்-குர்ரான்
(2)
ஆறிலும் அன்பு நூறிலும்-அன்பு  
செய்திடல் வேண்டும் என்ற-பிரான்
அன்பே வடிவெனும் நம் பெருமான் 
அன்பு..செய் என்றான் சாயிபிரான்
இதுதான் வேதமும் பைபிள்-குர்ரான்
 (MUSIC)
கலங்கும்விஜயனின் தயக்கத்தைமுடித்து
கடமையைச் சொன்னான் கீதையிலே..ஆ..ஆ...ஆ..ஆ..
கலங்கும்விஜயனின் தயக்கத்தைமுடித்து
கடமையைச் சொன்னான் கீதையிலே
இமய வரம்பெனத் த்யாகத்தில் ஓங்கியே
இதைத்தான் சொன்னான் ஏசுபிரான் 
அன்பு..செய் என்றான் சாயிபிரான்
இதுதான் வேதமும் பைபிள்-குர்ரான்
(MUSIC)
கருவினில் தொடங்கி இருப்பது வரையில்
அன்புசெய் என்றான் சாயிபிரான்..ஆ..ஆ...ஆ..ஆ..
கருவினில் தொடங்கி இருப்பது வரையில்
அன்புசெய் என்றான் சாயிபிரான்
இருப்பதைக் கொண்டு அன்பினைக் காட்டு
என்கின்ற சொல்லே திருக்குர்ரான்
அன்பு..செய் என்றான் சாயிபிரான்
இதுதான் வேதமும் பைபிள்-குர்ரான் 
(MUSIC)
 வாழ்ந்திடக் கோடி செல்வங்கள் தேடி
உண்மையில் மகிழ்வுடன் வாழ்ந்தவர் யார்
(2)
ஏழையைத்  தேடி அவரிடம் ஓடி 
அன்பினைப் பகிர்ந்திடும் மானிடர்தான் 
அன்..புசெய் என்றான் சாயிபிரான்
இதுதான்வேதமும் பைபிள்-குர்ரான்
ஆறிலும் அன்பு நூறிலும் அன்பு 
செய்வது மனிதனின்  கடமை என்றான்
அன்பே தெய்வத்தின் வடிவமென்றான் 
அன்..புசெய் என்றான் சாயிபிரான்
இதுதான் வேதமும் பைபிள்-குர்ரான்





No comments:

Post a Comment